|
20. வேஎய்பிணங்கிய மிளைசூழரணம் பாஅய்புள்ளிற் பாய்ந்த
மூதுழிஞைக்குச் செய்யுள்:-
“கோடுயர் வெற்பி னிலங்கண் டிரைகருதுந்
தோடுகொள் புள்ளின் *றொகையொப்பக்-கூடார்
முரணகத்துப் பாற முழவுத்தோண் மள்ள
ரரணகத்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து” [பு. வெ. உழி. 20]
எனவரும்.
21. முரணகத்தவிய முதுசினஞ் சிறந்தோர ரணகத்தோரை
யடலகத்துழிஞைக்குச் செய்யுள்:-
“செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க
வங்கண் விசும்பி னணிதிகழுந்-திங்கண்
முகத்தா ரலற முகிலுரிஞ்சுஞ் சூழி
யகத்தாரை வென்றா ரமர்” [பு. வெ. உழி. 22]
எனவரும்.
22. அருமுரணதனால் அமர்வரவறியாச் செருமதிலோர்
சிறப்புரைத்த பக்கத்திற்குச் செய்யுள்:-
“அறியார் வயவ ரகத்திழிந்த பின்னு
நெறியார் நெடுமதிலு ணேரார்-மறியாங்
கிளியொடு நேராங் கிளவியார் வாட்கட்
களியுறு காமங் கலந்து” [பு. வெ. உழி. 22]
எனவரும்.
23. அகத்தோன்காலை அதிர்முரசியம்பப் புறத்தோன் வஞ்சினம்
புகன்முற்று முதிர்வுக்குச் செய்யுள்:-
“காலை முரச மதிலியம்பக் கண்கனன்று
வேலை விறல்வெய்யோ னோக்குதலு-மாலை
யடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு” [பு. வெ. உழி. 23]
எனவரும்.
24. மேவலர்க்கடந்து வெலற்கருங் காவலொடு
யானைகைக்கொண்ட யானைகைக்கோளுக்குச் செய்யுள்:-
“ஏவ லிகன்மறவர் வீய விகல்கடந்து
காவலும் யானையுங் கைக்கொண்டான்-மாவலான்
(பா - ம்) * றொகையேய்ப்ப |