|
வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த
வம்புடை ஞாயி லரண்” [பு. வெ. உழி. 24]
எனவரும்.
25. முற்றுவிட்டகல மற்றொரு வேந்தன் வெற்றியம்படை வரூஉம்
வேற்றுப்படை
வரவுக்குச் செய்யுள்:-
“உவனின் றுறுதுயர முய்யாமை நோக்கி
யவனென் றுலகேத்து மாண்மை-யிவனன்றி
மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரண
முற்றியார் முற்று விட” [பு. வெ. உழி. 25]
எனவரும்.
26. எண்ணாராரெயில் கழுதையேரின் உண்ணாவரகுகொள்
உழுது வித்திடுதற்குச்
செய்யுள்:-
“எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
கழுதையேர் கையொளிர்வேல் கோலா-வுழுததற்பின்
வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
கள்விரவு தாரான் கதம்” [பு. வெ. உழி. 26]
எனவரும்.
27. புண்ணியநீரிற் புரையோரேத்த மண்ணுதல்புரிந்த வாண்மங்
கலத்திற்குச் செய்யுள்:-*
“தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்
கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்து
மிடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான்
புடையா ரறையப் புகழ்” [பு. வெ. உழி. 27]
எனவரும்.
28. கோமகனடிமலர் குறுகலர்புனைய மாமதிற்குமரியொடு
மணந்த மங்கலத்திற்குச்
செய்யுள்:-
“எங்கண் மலர வெயிற்குமரி கூடிய
மங்கல நாள்யா மகிழ்தூங்கக்-கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி” [பு. வெ. உழி. 28]
எனவரும்.
* புறநா. 95 - பாடாண்டிணை. |