|
2. துண்ணெனவரூஉந் தூசிதாங்கி விண்விருந்தாக விளிந்தமறப்
பாசிக்குச் செய்யுள்:-
“பாயினார் மாயும் வகையாற் பலகாப்பு
மேயினா ரேய விகன்மறவ-ராயினா
ரொன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி
வென்றி யமரர் விருந்து” [பு. வெ. நொச். 2]
எனவரும்.
3. அருமிளையொடுகிடங்கு அழியாதிகலி உருகெழுமறவர் உடன்ற
ஊர்ச்செருவுக்குச் செய்யுள்:- *
“வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி
மிளையுங் கிடங்குஞ் சிதையத்-தளைபரிந்த
நோனார் படையிரிய நொச்சி விறன்மறவ
ரானா ரமர்விலக்கி யார்ப்பு” [பு. வெ. நொச். 3]
எனவரும்.
4. ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளைகாத்து வீழ்ந்தவேலோர்
விறன் மேம்படுத்தற்குச் செய்யுள்:-
1
“ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க்
காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய்-வேண்டார்
மடங்க லனைய மறவேலோர் தத்த
முடம்பொடு காவ லுயிர்”
[பு. வெ. நொச். 4]
எனவரும்.
5. மதிதொடுபுரிசை வாமான்கடுப்பிற்கு எதிரன்மினென்னும்
இவுளிமறத்திற்குச் செய்யுள்:- 2
“தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவி
ரோங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர்
மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றா
ருயிருணிய வோடி வரும்” [பு. வெ. நொச். 5]
எனவரும்.
* செருமலைதல் - புறநா. 295.
1 செருவிடை வீழ்வதுமிது - புறநா. 271, 272.
2 புறநா. 273, 299, 302 - 304. |