|
6. வாள்வடுப்பட்டும் வடுப்படாதகத்தோர் தோள்வடுப்படப் பகை
தொலைத்த எயிற்போர்க்குச்
செய்யுள்:-
“மிகத்தாய செங்குருதி மேவரு மார்பி
னுகத்தா முயங்கியக் கண்ணு-மகத்தார்
புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி
மறத்திடை மானமேற் கொண்டு” [பு. வெ. நொச். 6]
எனவரும்.
7. துணிவுடையடுபடைத் தொடுகழன்மறவன் அணிமணி யெயின்
மிசை அழிந்த நொச்சிக்குச் செய்யுள்:-
“அகத்தன வார்கழ னோன்றா ளரணின்
புறத்தன போரெழிற் றிண்டோ-ளுறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வானுலகி னான்” [பு. வெ. நொச். 7]
எனவரும்.
8. இழிபு மேன்மேல் எழுதலு மிகலி அழிபடையானெறிந்து அழி
படைதாங்கற்குச் செய்யுள்:-
“பரிசை பலகடந்து பற்றா ரெதிர்ந்தா
ரெரிசெ யிகலரணங் கொண்மார்-புரிசை
யகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி
மிகத்தடிந்தார் மேனின் றவர்” [பு. வெ. நொச். 8]
எனவரும்.
9. வெம்முரணான் மகள் வேண்டலும் அதனுக்கு அம்மதிலோர்
மறுத்து உரைத்தபக்கத்திற்குச் செய்யுள்:-
*
“ஒள்வாண் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட்
கள்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான்
மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
கருங்கண்ணி வெண்கட்டிற் கால்”
[பு. வெ. நொச். 9]
எனவரும். (11)
* மகண்மறுத்தல் - புறநா. 109-111. |