பக்கம் எண் :

44 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

        7. குதிரைமறத்திற்குச் செய்யுள்:- *

    
“குந்தங் கொடுவிற் குருதிவேல் கூடாதார்
     வந்த வகையறியா வாளமருள்-வெந்திற
     லார்கழன் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை
     வார்கணையின் முந்தி வரும்”
                   [பு. வெ. தும். 7]

எனவரும்.

    
8. முன்னெழுவயப்படை தாங்குவல்யானென மன்னவற் குரைத்த
தூசிநிலைக்குச்
செய்யுள்:-

    
“உறுசுடர் வாளோ டொருகால் விலங்கிற்
     சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டா-யெறிசுடர்வேற்
     றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னொடு
     பாங்கலா மன்னர் படை”
                       [பு. வெ. தும். 8]

எனவரும்.

    
9. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழியொருவன்
தான்மீண்டெறிந்த மற்றதன் பகுதிக்குச்
செய்யுள்:-

    
“காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
     வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே-தோலா
     விலைபுனை தண்டா ரிறைவன்மேல் வந்த
     மலைபுரை யானை மறிந்து”
                     [பு. வெ. தும். 9]

எனவரும்.

     1
0. முறிமலர்நறுந்தார் மொய்கழல்வேந்தன் செறிமணித்தேர் மறஞ்
சிறந்தமை கூறற்குச்
செய்யுள்:-

    
“செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ள
     மருமுர ணாழி தொடர-வருமரோ
     கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தே
     ரொட்டார் புறத்தின்மே லூர்ந்து”
               [பு. வெ. தும். 10]

எனவரும்.

    
11. மையல்யானை எறிந்துமாய்ந்தோர்க்குக் கைவல்யாழ்ப்பாணர்
கடன்முறைகழித்தற்குச்
செய்யுள்:- 1

    
“தளரிய றாய்புதல்வர் தாமுண ராமைக்
     களரிக் கனன்முழங்க மூட்டி-விளரிப்பண்

   * புறநா. 273, 299, 302, 304.
   1 பாண்பாட்டு-புறநா. 260, 284-311.