பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]45


     கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு
     விண்ணினார் செய்தார் விருந்து”
                [பு. வெ. தும். 11]

எனவரும்.

    
12. இருவர் தலைவர் தபுதிக்கண்ணும் பொருபடையகலாப்
போர்புரிநிலைக்குச்
செய்யுள்:-

    
“காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி
     வேந்த ரிருவரும் விண்படர-வேந்து
     பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
     யிருபடையு நீங்கா விகல்”
                     [பு. வெ. தும். 12]

எனவரும்.

     1
3. குருதிவே லொருவன் கூழைதாங்கி இரிபடைப்பின்னின்ற
எருமைமறத்திற்குச்
செய்யுள்:-*

    
“கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
     நெடுங்கைப் பிணத்திடை நின்றா-னடுங்கமரு
     ளாள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி
     வாள்வெள்ளந் தன்மேல் வர”
                  [பு. வெ. தும். 13]

எனவரும். எருமைபோலச் சிறக்கணித்து நிற்றலின் எருமைமறமாயிற்று.

    
14. வேற்படை களிற்றொடும் போக்கி மெய்வலியின் ஏற்றுடன்
றடரும் ஏமவெருமைக்குச்
செய்யுள்:-

    
“மருப்புத்தோ ளாக மதவிடையிற் சீறிச்
     செருப்புகன்று செங்கண் மறவன்-நெருப்பிமையாக்
     கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி
     மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு”
             [பு. வெ. தும். 14]

எனவரும்.

     1
5. நேரலர்பனிப்ப நெஞ்சிடைக்குளித்த கூரெயில் பறித்துக்
கைக்கொண்ட நூழிற்குச்
செய்யுள்:-

    
“மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல்
     கையகத்துக் கொண்டான் கழல்விடலை-வெய்ய

   * புறநா. 80, 274, 275 பாடல்கள்.