பக்கம் எண் :

46 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
     படுசுட ரெஃகம் பறித்து”
                      [பு. வெ. தும். 15]

எனவரும். நூழில் - கொன்றுகுவித்தல்.

    
16. மாறிருவேந்தன் வயப்படையுடைய வேறிரித்தாடிய 
நூழிலாட்டிற்குச்
செய்யுள்:- *

    
“ஆட லமர்ந்தா னமர்வெய்யோன் வீழ்குடர்
     சூடன் மலைந்த சுழல்கட்பேய்-மீடன்
     மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் மார்பந்
     திறந்தவேல் கையிற் றிரித்து”
                  [பு. வெ. தும். 15]

எனவரும்.

    
17. மின்னவிர்கழலார் வேந்தன்வெஃறேர் முன்னராடிய முன்றேர்க்
குரவைக்குச்
செய்யுள்:-

    
“ஆனா வயவர்முன் னாட வமர்க்களத்து
     வானார்மின் னாகி வழிநுடங்கு-நோனாக்
     கழுமணிப் பைம்பூட் கழல்வேந்த னூருங்
     குழுமணித் திண்டேர்க் கொடி”
                 [பு. வெ. தும். 17]

எனவரும்.

     18. அன்னரொடுவிறலிய ராண்டகை நெடுந்தேர்ப் பின்னராடிய
பின்றேர்க் குரவைக்குச்
செய்யுள்:-

     “கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்
     வளையா வயவரும் பின்னாக்- கொளையாய்ந்
     தசைவிளங்கும் பாடலொ டாட வருமே
     திசைவிளங்குந் தானையான் றேர்”
              [பு. வெ. தும். 18]

எனவரும். கேள்வி - சுருதி.

    
19. மன்னவனூரும் மறமிகுமணித்தேர்ப் பின்னு முன்னும் பேயாடு
குரவைக்குச்
செய்யுள்:-
 

     “முன்னரும் பின்னரு மூரிக் கடற்றானை
     மன்ன னெடுந்தேர் மறனேத்தி - யொன்னார்
     நிணங்கொள்பேழ் வாய நிழல்போ னுடங்கிக்
     கணங்கொள்பே யாடுங் களித்து”
[பு. வெ. தும். 19]

எனவரும்.

  
* புறநா. 309, 310.