|
20. ஒளிற்றெஃகம்பட வீழ்ந்த வொண்மருப்பிற் களிற்றுடன்
கண்படு களிற்றுடனிலைக்குச்
செய்யுள்:-*
“இறுவரை வீழ வியக்கற் றவிந்த
தறுகட் டகையரிமாப் போன்றான்-சிறுகட்
பெருங்கைக் களிறெறிந்து பின்னதன்கீழ்ப் பட்ட
கருங்கழற் செவ்வே லவன்” [பு. வெ. தும். 20]
எனவரும்.
21. வடிவாள்விதிரா வயவர் மன்னவன் உடனாட்டயர்ந்த
ஒள்வாளமலைக்குச்
செய்யுள்:-
“வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையா
ராளமர் வென்றி யடுகளத்துத்-தோள்பெயராக்
காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்
வேந்தொடு வெள்வாள் விதிர்த்து” [பு. வெ. தும். 21]
எனவரும்.
22. இருபாற்படையும் ஏத்த நெடுந்தகை பொருபோர்ப் பொலிந்த
தானைநிலைக்குச்
செய்யுள்:-
1
“நேரார் படையி னிலைமை நெடுந்தகை
யோரா னுறைகழியா னொள்வாளுந்-தேரார்க்கும்
வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்குங்
கம்பமாய் நின்றான் களத்து” [பு. வெ. தும். 22]
எனவரும்.
23. கணையும்வேலுந் துணையுற மொய்த்தலிற் சென்றவுயிரின்
நின்ற யாக்கை யிருநிலந்தீண்டா
வெருவரு நிலைக்குச்
செய்யுள்:-
“வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
வெங்கு மருமத் திடைகுளிப்பச்-செங்கட்
புலவா ணெடுந்தகை பூம்பொழி லாகங்
கலவாமற் காத்த கணை” [பு. வெ. தும். 23]
எனவரும்.
24. அருவரைமார்பு தம் அலர்முலைகுளிப்பத் தெரிவையர்
முயங்கிய சிருங்காரநிலைக்குச் செய்யுள்:-
* புறநா. 307.
1 புறநா. 276. |