பக்கம் எண் :

48 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     “எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத்
     தங்கணவன் றார்தம் முலைமுகப்ப-வெங்கணைசேர்
     புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
     நுண்ணிடைப் பேரல்கு லார்”
                  [பு. வெ. தும். 24]

னவரும்.

    
25. வாள்வாய்த்திட்ட வடுவாழ்யாக்கைக் கேள்கண்டு கலுழ்ந்த
உவகைக் கலுழ்ச்சிக்குச்
செய்யுள்:-*

    
“வெந்தொழிற் கூற்றமு நாணின்று வெங்களத்து
     வந்த மறவர்கை வாடுமிப்பப்-பைந்தொடி
     யாடரிமா வன்னான் கிடப்ப வகத்துவகை
     யோடரிக்கண் ணீரா யுக”
                      [பு. வெ. தும். 25]

எனவரும்.

    
26. தம்முடையிறைவன் விசும்படைந்தானென வெம்முரணானுயிர்
வேள்வி வேட்டற்குச்
செய்யுள்:-

    
“வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா
     மானமேநெய் யாக மறம்விறகாத்-தேனிமிருங்
     கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளம
     ரொள்ளழலுள் வேட்டா னுயிர்”
                [பு. வெ. தும். 26]

எனவரும்.

     27. காய்கதிர் நெடுவேற் கணவனைக்காணிய ஆயிழைசென்ற
பக்கத்திற்குச்
செய்யுள்:-

    
“கற்பின் விழுமிய தில்லைக் கடையிறந்
     திற்பிறப்பு நாணு மிடையொழிய-நற்போ
     ரணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான்
     வணங்கிடை தானே வரும்”
                    [பு. வெ. தும். 27]

எனவரும்.

    
28. இருபெரு வேந்தர் தாமுஞ்சுற்றமும் ஒருவருமொழியாத்
தொகைநிலைக்குச்
செய்யுள்:- 1

    
“மண்டமர்த் திண்டோண் மறங்கடைஇ மண்புலம்பக்
     கண்டிரள்வேன் மன்னர் களம்பட்டார்-பெண்டிர்

   * புறநா. 277, 278, 295.
   1 புறநா. 62 63.