பக்கம் எண் :

52 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     வழலோ டிமைக்கு மணங்குடைவாண் மைந்தர்
     கழலோடு பூங்கண்ணி கச்சு”
                     [பு. வெ. வா. 2]

எனவரும்.

     3. ஐவகைமரபின் அரசவாகைக்குச் செய்யுள்:-*

     “காவ லமைந்தான் கடலுலகங் காவலா
     லோவ லறியா துயிர்க்குவகை-மேவருஞ்சீ
     ரைந்தொழி னான்மறை முத்தீ யிருபிறப்பு
     வெந்திறற் றண்ணளியெம் வேந்து”
               [பு. வெ. வா. 3]

எனவரும். ஐந்தொழில் - ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல்,
பல்லுயிரோம்பல்.

     4. மொய்கழலான்பதி முரசு நிலையுரைத்தற்குச் செய்யுள்:-
     “மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து
     புதிய புகழ்மாலை வேய-நிதியம்
     வழங்குந் தடக்கையான் வான்றோய் நகருண்
     முழங்கு மதிரு முரசு”
                          [பு. வெ. வா. 4]

எனவரும்.

     5. மன்னனை யுழவனெனும் மறக்களவழிக்குச் செய்யுள்:-1

     “அஞ்சுவருந் தானை யமரென்னும் நீள்வயலுள்
     வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்குஞ்-செஞ்சுடர்வேற்
     பைங்கட் பணைத்தாட் பகட்டுழவ னல்கலா
     னெங்கட் கடையா விடர்”
                       [பு. வெ. வா. 5]

எனவரும்.

     6. அன்னவன் அணங்கார் அடுகளம் வேட்டற்குச் செய்யுள்:-

     “பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக்
     கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத்
     தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
     மூளையஞ் சோற்றை முகந்து”
                   [பு. வெ. வா. 6]

எனவரும். பிடித்தாடி - பலு.

     7. வென்றவேந்தன் மீளியந்தேர்முன் நின்று பேயாடல் நிகழ்த்திய
குரவைக்குச்
செய்யுள்:-

     “உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று
     புலவாய புன்றலைப்பே யாடுங்-கலவா

   * புறநா. 17, 19 முதலிய 36 பாடல்கள்.
   1 ” 368-371, 373-இஃதேர்க்களவுருவகமெனினும் இழுக்காது.
   இ. வி.-24