பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]53


     வரசதிர நூறி யடுகளம் வேட்டான்
     முரசதிர வென்றதேர் முன்”
                     [பு. வெ. வா. 7]

எனவரும்.

   
8. பெய்கழல்வேந்தன் பிறங்கொலித்தேர்ப்பின் மொய்வளை 
விறலியர் வயவரோ டாடற்குச்
செய்யுள்:-

    
“வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரு
     மஞ்சொல் விறலியரு மாடுபவே-வெஞ்சமத்துக்
     குன்றே மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
     பின்றேர்க் குரவை பிணைந்து”
                  [பு. வெ. வா. 8]

எனவரும்.

    
9. அறுவகைப்பட்ட பார்ப்பன வாகைக்குச் செய்யுள்:-*

    
“ஓதங் கரை தவழ்நீர் வேலி யுலகினில்
     வேதங் கரைகண்டான் வீற்றிருக்கு-மேதஞ்
     சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
     விடுசுடர் வேள்வி யகத்து”
                      [பு. வெ. வா. 9]

எனவரும்.

     அறுவகையாவன. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்,
ஏற்றல் என இவை.

    
10. இருமூன்று மரபின் ஏனோர்வாகை இரண்டனுள் வாணிக
வாகைக்குச்
செய்யுள்:-

    
“உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப்
     பழுதிலாப் பண்டம் பகர்ந்து-முழுதுணர
     வோதி யழல்வழிபட் டோம்பாத வீகையா
     னாதி வணிகர்க் கரசு”
                         [பு. வெ. வா. 10]

எனவரும்.

    
11. வேளாண்வாகைக்குச் செய்யுள்:-

    
“மூவரு நெஞ்சமர முற்றி யவரவ
     ரேவ லெதிர்கொண்டு மீண்டுரையா-னேவல்
     வழுவான் வழிநின்று வண்டார் வயலு
     ளுழுவா னுலகுக் குயிர்”
                        [பு. வெ. வா. 11]

எனவரும்.

  
* புறநா. 166, 305.