|
12. புகழொடு பெருமைநோக்கி யாரையு மிகழேலென்ற பொருந
வாகைக்குச்
செய்யுள்:-
“வெள்ளம்போற் றானை வியந்து விரவாரை
யெள்ளி யுணர்த லியல்பன்று-தெள்ளியா
ராறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார்
நீறுமேற் பூத்த நெருப்பு” [பு. வெ. வா. 12]
எனவரும்.
13. முக்காலநிகழ்வு முறையுளியறியுந் தக்கோனிலைபுகல் அறிவன்
வாகைக்குச்
செய்யுள்:-
“இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போ
லம்மூன்று முற்ற வறிதலாற்-றம்மி
னுறழா மயங்கி யுறழினு மென்றும்
பிறழா பெரியார்வாய்ச் சொல்” [பு. வெ. வா. 13]
எனவரும்.
உறழாமயங்கியுறழ்தலாவது, பால்புளித்தலும் பகலிருளலும் நால்வேதநெறி
தவறுதலும் முதலியவாம்.
14. நாலிருவழக்கிற் றாபத வாகைக்குச்
செய்யுள்:-*
“நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி” [பு. வெ. வா. 14]
எனவரும்.
15. கூதிர்வாடை யென்றிரு பாசறைக் காதலினொன்றிக் கண்ணிய
நிலைமை இரண்டனுட் (1) கூதிர்ப்பாசறைக்குச்
செய்யுள்:-
“கவலை மறுகிற் கடுங்கண் மறவ
ருவலைசெய் கூரை யொடுங்கத்-துவலைசெய்
கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாண் முயக்கு” [பு. வெ. வா. 15]
எனவரும். உவலை - தழை.
15. (2) வாடைப்பாசறைக்குச்
செய்யுள்:-
வாடை நலிய வடிக்கணா டோணசைஇ
யோடை மழகளிற்றா னுள்ளான்கொல்-கோடன்
* புறநா 251, 252. |