|
முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப்
பகையொடு பாசறையு ளான்” [பு. வெ. வா. 16]
எனவரும்.
16. தண்ணளிபெருகத் தரையகம்புரக்கும் அண்ணலியல்புரைத்த
அரச முல்லைக்குச்
செய்யுள்:-
“செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி
மயிர்க்கண் முரச முழங்க-வுயிர்க்கெல்லா
நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க்
காவலன் சேறல் கடன்”
[பு. வெ. வா. 17]
எனவரும்.
முயற்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை
முல்லையெனவும் கூறுபவாகலின், இவரும் வாகையென்றும் முல்லையென்றுங்
கூறினார்.
17. நண்புறுபொருட்டாய் நடுவுநிலையரசற்குப் பண்புறச் சொல்லும்
பார்ப்பனமுல்லைக்குச்
செய்யுள்:-
“ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன்-செல்லலும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
யென்றன்றி மீண்ட திலர்” [பு. வெ. வா. 18]
எனவரும்.
18. எட்டுவகைநுதலிய அவையமுல்லைக்குச் செய்யுள்:-
“தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை யூழிவை தோலாத்-தொடைவேட்
டழிபட லாற்ற லறிமுறையென் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை” [பு. வெ. வா. 19]
எனவரும்.
எட்டாவன:-
“குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை
நடுச்சொல்லு நல்லணி யாக்கங்-கெடுக்கு
மழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டு
மிழுக்கா வவையின்க ணெட்டு” [-,,-மேற்.]
என்பன. |