பக்கம் எண் :

56 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     19. பனியும் வெயிலுங் கூதிரும் அயர்வுந் துனியில்
கொள்கையொடு நோன்மையெய்தித் துணிவற்றகழ்ந்த கணிவன்
முல்லைக்குச்
செய்யுள்:-

    
“புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
     பரிவின்றிப் பட்டாங் கறியத்-திரிவின்றி
     விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாங்
     கண்ணி யுரைப்பான் கணி”
                     [பு. வெ. வா. 20]

எனவரும்.

    
20. ஏதமிலாடவர்க்கன்றி யிகன்மறம் பேதையர்க்கும்புகன் மூதின்
முல்லைக்குச்
செய்யுள்:- *

    
“வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து
     வெந்திற லெஃக மிறைக்கொளீஇ-முந்தை
     முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள்
     புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு”
          [பு. வெ. வா. 21]

எனவரும்.

     21. அருஞ்சமம்வழிவழி ஆற்றியேறுண்ட இருங்குடி மறம்புகல்
ஏறாண் முல்லைக்குச்
செய்யுள்:- 1

    
“கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
     முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று
     கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
     யெய்போற் கிடந்தானென் னேறு”
               [பு. வெ. வா. 22]

எனவரும்.

    
22. இல்லும்பதியும் இயல்புங்கூறி வல்லோனை மிகுத்த வல்லாண்
முல்லைக்குச்
செய்யுள்:- 2

    
“வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறா அர்
     முன்முன் முயலுகளு முன்றிற்றே-மன்முன்
     வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி
     யுரைமாலை சூடினா னூர்”
                      [பு. வெ. வா. 23]

எனவரும்.

    
23. தொடுகடலுலகினைத் துளங்காதிறை தன்கடனெனக் காத்த
காவன்முல்லைக்குச்
செய்யுள்:-

    
“பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
     கருங்கழல் வெண்குடையான் காவல்-விரும்பா
 
   * புறநா. 279, 288 முதலிய 15 பாடல்கள்.
   1 ” 86, 296.
   2 ” 170, 178, 181, 313-322.