|
னொருநாண் மடியி னுலகின்மே னில்லா
திருநால் வகையா ரியல்பு” [பு. வெ. வா. 24]
எனவரும். இருநால்வகை மேற்கூறிய குடிப்பிறப்பு முதலியன.
தக்கனபிறபிறர் சாற்றுமக் கூற்றுக்குச் செய்யுள்:-
“ஊறின் றுவகையுள் வைக வுயிரோம்பி
யாறிலொன் றானா தளித்துண்டு-மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலுந்
தான்காவல் கொண்ட றகும்”
[பு. வெ. வா. 25]
எனவரும்.
24. மிக்க களமரசுகொள் பேராண் முல்லைக்குச் செய்யுள்:-
“ஏந்துவாட் டானை யிரிய வுறைகழித்துப்
போந்துவாண் மின்னும் பொருசமத்து-வேந்த
ரிருங்களி யானை யினமிரிந் தோடக்
கருங்கழலான் கொண்டான் களம்”
[பு. வெ. வா. 26]
எனவரும்.
25. வெள்வாள் வேந்தன் வேண்டியதீயவுங் கொள்ளாமறவன்
கொதித்த மறமுல்லைக்குச் செய்யுள்:-
“வின்னவி றோளானும் வேண்டிய கொள்கென்னுங்
கன்னவி றிண்டோட் கழலானு-மன்னன்மு
னொன்றா னழல்விழியா வொள்வாள் வலனேந்தி
நின்றா னெடிய மொழிந்து” [பு. வெ. வா. 27]
எனவரும்.
26. குடைபுகழ் முல்லைக்குச் செய்யுள்:-
“வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டந்
தாய புகழான் றனிக்குடைக்குத்-தோய
மெதிர்வழங்கு கொண்மூ விடைபோழ்ந்த சுற்றுக்
கதிர்வழங்கு மாமலை காம்பு” [பு. வெ. வா. 28]
எனவரும். சுற்று - சுற்றுத்தாமம்.
27. கண்படை நிலைக்குச் செய்யுள்:-
“கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும்
வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தர்க்குப்-பொங்கு |