|
புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக்
கனலா துயிலேற்ற கண்” [பு. வெ. வா. 29]
எனவரும்.
28. அடல்கெழுமறவர் அவிப்பலி கொடுத்தற்குச் செய்யுள்:-
“சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும்-பிறங்கழலு
ளாருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு” [பு. வெ. வா. 30]
எனவரும்.
29. வான்றோய் புகழொடு வயங்குமொருநிலைமைச்
சான்றோர்நெறி புகல் சால்பு முல்லைக்குச்
செய்யுள்:-
“உறையார் விசும்பி னுவாமதி போல
நிறையா நிலவுத லன்றிக்-குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் *வான்மையார் சால்பு” [பு. வெ. வா. 31]
எனவரும்.
30. மலிவயலுழவனை வறுமைதீர்பெருவளம் பொலிகெனக்
கிணைவன் புகழ்ந்த களவழிக்குச் செய்யுள்:-
“பகடுவாழ் கென்று பனிவயலு ளாமை
யகடுபோ லங்கட் டடாரித்-துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குரிசில் வளம்பாட
வின்றுபோ மெங்கட் கிடர்” [பு. வெ. வா. 32]
எனவரும்.
31. மெய்யில் வையகத்து விழைவினையறுத்துப் பொய்யில்
தத்துவப் பொருளொடு புகறற்குச் செய்யுள்:-
“ஆமினி மூப்பு மகன்ற திளமையுந்
தாமினி நோயுந் தலைவரும்-யாமினி
மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த
வையைந்து மாய்வ தறிவு” [பு. வெ. வா. 33]
எனவரும்.
(பா - ம்) * வாய்மையார். |