பக்கம் எண் :

62 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

காதற் கணவனொடு கனையெரி மூழ்கு
மாதர் மலிபுரைந்த வாஞ்சிக் காஞ்சியு
மன்னுயிர் நீத்த வேலின் மனையோ
ளின்னுயிர் நீத்த வத்துறைப் பகுதியுங்
கறுத்தவா ளுழவனிக் கன்னியைத் தருகென
மறுத்துரை யாடிய மகட்பாற் காஞ்சியு
மன்னவ னிகன்மற மடங்கவே லிறைவன்
முன்னிருந் தருமுனை முரித்தமுன் னிருப்பு
மென்றுமுறை நவின்ற வெழுமூன்று நான்குஞ்
சென்றெதிர் காஞ்சித் திணையது விரியே.

     இது முற்கூறிய காஞ்சித்திணை இத்துணைத்துறையுடைத் தென்கின்றது.

     (இ - ள்.) வருபடை நோனான் மடுத்தெதிரூன்றக் கருதிவே லுழவன்
காஞ்சிசூடுதல் முதல் ஈறாகிய மன்னவனிகன் மறம் மடங்க வேலிறைவன்
முன்னிருந்தருமுனை முரித்தமுன்னிருப்புமென முறையே சொல்லப்பட்ட
இருபத்தைந்து துறையுஞ் சென்றெதிரூன்றலாகிய காஞ்சித் திணையினது
விரியாம்; எ - று.

    
1. வருபடை நோனான் மடுத்தெதிரூன்றக் கருதிவே லுழவன்
காஞ்சி சூடுதற்குச்
செய்யுள்:-

    
“அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப்
     பெருவரைச் சீறூர் கருதிச்-செருவெய்யோன்
     காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ
     தோஞ்செய் மறவர் தொழில்”
               [பு. வெ. காஞ்சி. 1]

எனவரும்.

     2. மேல்வரு படைவர மிகவுமாற்றா வேல்வ லாடவர்  
விறன்மிகுத்தெதிர்தற்குச்
செய்யுள்:-

     “மன்மேல் வருமென நோக்கான் மலர்மார்பில்
     வென்வேன் முகந்தபுண் வெய்துயிர்ப்பத்-தன்வேல்
     பிடிக்கலு மாற்றாப் பெருந்தகையேவத்
     துடிக்கண் புலையன் றொடும்”             
[பு. வெ. காஞ். 2]

எனவரும். வென் - வெற்றி.