|
3. வந்து புலத்திறுத்தோர் வரம்பு கடவாமை தந்தங்கடவை
தழீஇயதழிஞ்சிக்குச் செய்யுள்:-
“குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி
யுலாவு முழப்பொழிக வேந்தன்-கலாவு
மினவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல்
புனவேய் நரலும் புழை” [பு. வெ. காஞ். 3]
எனவரும்.
4. வடிசுடர்வேலோன் வாட்குடியவர்க்குப் படுசுடரிமைக்கும்
படை பல வழங்கற்குச் செய்யுள்:-
“ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
வையிலை யெஃக மவைபலவு-மொய்யிடை
யாட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
வாட்குடி வன்க ணவர்க்கு” [பு. வெ. காஞ். 4]
எனவரும்.
5. வழங்கலுமறவரவ் வரிசையேத்தித் தழங்கொலிமுரசிற் சாற்றிய
பக்கத்திற்குச் செய்யுள்:-
“துன்னருந் துப்பிற் றொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னம ரொள்வாளென் கைதந்தான்-மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து” [பு. வெ. காஞ். 5]
எனவரும்.
6. தாங்குவிறன்மறவர் தத்தந்தோள்வலி வீங்குபடை
நாப்பண்விளைத்த பெருங்காஞ்சிக்குச்
செய்யுள்:- *
“வில்லார் குறும்பிடை வேறுவே றார்த்தெழுந்த
கல்லா மறவர் கணைமாரி-யொல்லா
வெருவி மறவேந்தர் வெல்களி றெல்லா
மிருவி வரைபோன்ற வின்று” [பு. வெ. காஞ். 6]
னவரும். இருவி - தினைத்தாள்.
7. அருமுனையிறுத்தோன் அறைகூவியபின் செருமுனைச்
செல்கெனச் செப்புவாள் செலவுக்குச் செய்யுள்:-
“உணங்கு புலவறா வொன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி-யணங்கிய
* புறநா. 194, 357, 359, 360, 362 - 366. |