பக்கம் எண் :

64 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     குந்த மலியும் புரவியான் கூடாதார்
     வந்தபின் செல்கென்றான் வாள்”
             [பு. வெ. காஞ். 7]

எனவரும்.

    
8. முதுகுடிமறவர் முன்னுறச்சூழக் கொதியழல் வேலோன்
குடைமுனைச் சேறற்குச்
செய்யுள்:-

    
“தெம்முனை தேயத் திறல்விலங்கு தேர்த்தானை
     வெம்முனை வெற்றி விறல்வெய்யோன்-றம்முனை
     நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல்கென்று
     கூட்டிநாட் கொண்டான் குடை”
             [பு. வெ. காஞ்சி. 8]

எனவரும்.

    
9. இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ்சிறப்பின்
வஞ்சினக்காஞ்சிக்குச்
செய்யுள்:- *

    
“இன்று பகலோ னிறவாமு னொன்னாரை
     வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பி-னென்று
     மரணவியப் பாயு மடையார்மு னிற்பேன்
     முரணவிய முன்முன் மொழிந்து”
              [பு. வெ. காஞ். 9]

எனவரும்.

    
10. நேர்பொருமள்ளர் நெடுங்குடை வேந்தன் போரெதிர்
பூக்கோள் நிலைக்குச்
செய்யுள்:- 1

    
“பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன
     குருதியா றாவதுகொல் குன்றூர்-கருதி
     மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார்
     புறத்திறுத்த வேந்திரியப் பூ”
               [பு. வெ. காஞ். 10]

எனவரும்.

    
11. தூசுதாங்கிவீழ் சுழல்விழிமறவன் ஏசில்வான்றலைச் சிறப்பு
இயம்பு தலைக்காஞ்சிக்குச்
செய்யுள்:-

    
“விட்டிடிலென் வேந்தன் விலையிடினெ னிவ்வுலகி
     னிட்டுரையி னெய்துவ வெய்திற்றா-லொட்டாதார்
     போர்தாங்கி மின்னும் புலவா ளுறைகழியாத்
     தார்தாங்கி வீழ்ந்தான் றலை”
               [பு. வெ. காஞ். 11]

எனவரும்.

   * புறநா. 71-73.
   1 ” 293 (பூக்கோட்காஞ்சி)