பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]65


     12. அந்தமில் பெருஞ்சிறப் பமர்வீழருந்தலை தந்தவர்க்கீந்த
தலைமாராயத்துக்குச்
செய்யுள்:-

    
“உவன்றலை யென்று முறழ்வின்றி யொன்னா
     ரிவன்றலையென் றேத்த வியலு-மவன்றலை
     தந்தார்க்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி
     வந்தார்க் குவந்தீயும் வாழ்வு”
               [பு. வெ. காஞ். 12]

எனவரும்.

    
13. முலையுமுகனுஞ் சேர்த்திக்கொண்டோன் தலையொடு முடிந்த
நிலைக்குச்
செய்யுள்:-

    
“கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன்
     றலையானா டையலாள் கண்டே-முலையான்
     முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே
     யுயங்கினா ளோங்கிற் றுயிர்”
                [பு. வெ. காஞ். 13]

எனவரும்.

    
14. திறங்கொள் வேற்றரசருஞ் சென்னிதுளக்க மறங்கா டவிய
வயங்கு மறக்காஞ்சிக்குச்
செய்யுள்:-

    
“கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்
     பருந்தோ டெருவை படர-வருந்திறல்
     வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
     மாறா மறவன் மறம்”
                       [பு. வெ. காஞ். 14]

எனவரும்.

    
15. பண்புறவரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியுமத்துறைக்
கூற்றுக்குச்
செய்யுள்:-

    
“நகையம ராய நடுங்க நடுங்கான்
     றொகையம ரோட்டிய துப்பிற்-பகைவர்மு
     னுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற்
     பொங்கிப் பரிந்திட்டான் புண்”
             [பு. வெ. காஞ். 15]

எனவரும்.

    
16. ஏமச்சுற்றமின்றிப் புண்ணோற்பே யோம்படுத்த
பேயோம்புதற்குச்
செய்யுள்:-

    
“ஆயு மடுதிறலார்க் கன்பிலா ரில்போலுந்
     தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப்-பேயுங்