|
களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தா
னுளம்புகல வோம்பா லுறும்”
[பு. வெ. காஞ். 16]
எனவரும்.
17. ஆஅயகளத்தில் அவிந்தவாளுழவர்க்குப் பேஎயஞ்சிய
பேஎய்க் காஞ்சிக்குச் செய்யுள்:-
*
“கொட்கு நிமிருங் குறுகுங் குடர்சூடிப்
பெட்ப நகும்பெயரும் பேய்மக-ளுட்கப்
புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து
கனல விழிப்பவற் கண்டு” [பு. வெ. காஞ். 17]
எனவரும்.
18. வியன்மனைவிடலை விழுப்புண்காப்பவுந் துயன்முலைப்
பேஎய் மகள் தொட்டகாஞ்சிக்குச் செய்யுள்:-
“கொன்றுருத்த கூர்வே லவற்குறுகிக் கூரிருள்வாய்
நின்றுருத்து நோக்கி நெருப்புமிழாச்-சென்றொருத்தி
யொட்டார் படையிடந்த வாறாப்பு ணேந்தகலந்
தொட்டாள் பெருகத் துயில்” [பு. வெ. காஞ். 18]
எனவரும்.
19. இன்னகை மனைவி பேஎய்புண்ணோற்றுன்னுதல்கடிந்த
தொடாக் காஞ்சிக்குச் செய்யுள்:-
“ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூய்க்
கொய்யாக் குறிஞ்சி பலபாடி-மொய்யிணர்ப்
பூப்பெய் தெரிய னெடுந்தகைபுண் யாங்காப்பப்
பேய்ப்பெண் பெயரும் வரும்”
[பு. வெ. காஞ். 19]
எனவரும்.
20. இன்னனென்றிரங்கிய மன்னைக்காஞ்சிக்குச் செய்யுள்:- 1
“போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தானுவம
னூர்க்கு முலகிற்கு மோருயிர்மன்-யார்க்கு
மறந்திறந்த வாயி லடைத்ததா லண்ண
னிறந்திறந்த நீளிலை வேல்”
[பு. வெ. காஞ். 20]
எனவரும்.
21. மன்னன் மறவர்க்கு மட்டீந்த கட்காஞ்சிக்குச் செய்யுள்:-
“ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயின்
மன்னன் மறவர் மகிழ்தூங்கா-முன்னே
* புறநா. 281.
1 ” 235. |