பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]67

 

     படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
    விடலைக்கு வெங்கள் விடும்”
                   [பு. வெ. காஞ். 21]
 

எனவரும்.

    
22. காதற்கணவனொடு கனையெரிமூழ்கும் மாதர்மலிபுரைத்த
ஆஞ்சிக் காஞ்சிக்குச்
செய்யுள்:-

    
“தாங்கிய கேளொடு தானு மெரிபுகப்
     பூங்குழை யாயம் புலர்கென்னு-நீங்கா
     விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப்
     புலாழித் தலைக்கொண்ட புண்”
               [பு. வெ. காஞ். 22]

எனவரும்.

    
23. மன்னுயிர்நீத்த வேலின்மலையோள் இன்னுயிர்நீத்த
அத்துறைப் பகுதிக்குச்
செய்யுள்:-

    
“கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
     வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ-னவ்வேலே
     யம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற்
     கொம்பிற்கு மாயிற்றே கூற்று”
                [பு. வெ. காஞ். 23]

எனவரும்.

    
24. கறுத்தவாளுழவனிக் கன்னியைத் தருகென மறுத்துரையாடிய
மகட்பாற்காஞ்சிக்குச்
செய்யுள்:- *

    
“அளிய கழல்வேந்த ரம்மா வரிவை
     யெளியளென் றெள்ளி யுரைப்பிற்-குளியாவோ
     பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த
     கண்போற் பகழி கடிது”
                      [பு. வெ. காஞ். 24]

எனவரும்.

    
25. மன்னவனிகல்மறம் மடங்கவேலிறைவன் முன்னிருந் தருமுனை
முசித்தமுன் னிருப்புக்குச்
செய்யுள்:-

    
“கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்லக்
     கொடிமலி கொல்களி றேவித்-துடிமகிழ
     வார்த்திட் டமரு ளடையாரை யம்முனையிற்
     பேர்த்திட்டான் பெய்கழலி னான்”
             [பு. வெ. காஞ். 25]

எனவரும்.                                                     (17)

  
* புறநா. 336 - 354, 356.