|
2. சேய்வரல்வருத்தம்வீட வாயில்காவலர்க் குரைத்த
கடைநிலைக்குச் செய்யுள்:- *
“நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை
யீட்டிய சொல்லா னிவனென்று-காட்டிய
காயலோங் கெஃகிமைக்குங் கண்ணார் கொடிமதில்
வாயிலோய் வாயி லிசை” [பு. வெ. பா. 2]
எனவரும்.
3. காவல்கண்ணிய கழலோன் கைதொழும் மூவரிலொருவனை
முறையுளி வாழ்த்தற்குச் செய்யுள்:- 1
“வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா
ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய்-வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று
நெடுந்தகை நின்னையே யாம்” [பு. வெ. பா. 3]
எனவரும்.
4. மாயோன்மேய மன்பெருஞ்சிறப்பிற் றாவாவிழுப்புகழ்ப் பூவை
நிலைக்குச் செய்யுள்:- 2
“பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோ
யாவை விழுமிய யாமுணரே-மேவார்
மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்” [பு. வெ. பா. 4]
எனவரும்.
5. ஒருவனையவனொடும் ஒழிந்த வானவரொடும் பொருவினன்
புகழ்ந்த மற்றதன் பகுதிக்குச் செய்யுள்:-
“ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
* புறநா. 127, 382-384, 391-396, 398.
ஒன்றென முடித்தலாற் குடிநிலைவிடையும் (புறநா. 397) கொள்க.
1 புறநா. 1 - கடவுள் (சிவபெருமான்) வாழ்த்து.
2 ” 8, 56, 59, 374. |