பக்கம் எண் :

74 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     லடுகள மார்ப்ப வமரோட்டித் தந்த
     படுகளி நால்வாய்ப் பகடு”
                       [பு. வெ. பா. 5]

எனவரும்.
 

     7. இன்னோரின்னவை கொடுத்தனர் நீயும்
அன்னர்போலருள்கெனும் இயன்மொழி வாழ்த்திற்குச்
செய்யுள்:- *

     “முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையு
     மெல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை
     யிரவாம லீந்த விறைவர்போ னீயுங்
     கரவாம லீகை கடன்”
                           [பு. வெ. பா. 6]

எனவரும்.

    
8. மயலறுசீர்த்தி மான்றேர்மன்னன் இயல்பினை மொழியும்
அத்துறைப் பகுதிக்குச்
செய்யுள்:-

    
“ஒள்வா ளமரு ளுயிரோம்பான் றானீயக்
     கொள்வார் நடுவட் கொடையோம்பான்-வெள்வாள்
     கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலோ
     னொழியாமே யோம்பு முலகு”
                    [பு. வெ. பா. 7]

எனவரும்.

    
9. நெடுந்தேர்த்தானை நீறுபடநடக்குங் கடுந்தேர் மன்னவன்
கண்படை நிலைக்குச்
செய்யுள்:-

    
“மேலா ரிறையமருண் மின்னார் சினஞ்சொரியும்
     வேலான் விறன்முனை வென்றடக்கிக்-கோலாற்
     கொடிய வுலகிற் குறுகாம லெங்கோன்
     கடிய துயிலேற்ற கண்”
                          [பு. வெ. பா. 8]

எனவரும்.

    
10. அயில்வேன் மன்னனை அருளியவெழுகெனத் துயிலிடை
யெடுப்பிய துயிலெடைநிலைக்குச்
செய்யுள்:-

    
“அளந்த திரையா ரகலிடத்து மன்னர்
     வளந்தரு வேலோய் வணங்கக்-களந்தயங்கப்
     பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத்
     தூமலர்க்க ணேற்க துயில்”
                      [பு. வெ. பா. 9]

எனவரும்.

  
* புறநா. 8, 9, 10 முதலிய 58 பாடல்கள்.