பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]75


     11. கங்குற்கனைதுயில் எழுந்தோன்முன்னர் மங்கலங்கூறிய மங்கல
நிலைக்குச்
செய்யுள்:-

    
"விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு
     மண்வேண்டிற் கைகூப்பன் மங்கலம்-பெண்வேண்டிற்
     றுன்னன் மடவார்க்கு மங்கலந் தோலாப்போர்
     மன்னன் மலைபுரையு மார்பு"
                  [பு. வெ. பா. 10]

எனவரும்.

    
12. மன்னிய சிறப்பின் மங்கலமரபிற் றுன்னின னென்ற அத்துறைப்
பகுதிக்குச்
செய்யுள்:-

    
"தீண்டியுங் கண்டும் பயிற்றியுந் தன்செவியால்
     வேண்டியுங் கங்குல் விடியலு-மீண்டிய
     மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர்
     வெங்களத்து வேலுயர்த்த வேந்து"
               [பு. வெ. பா. 11]

எனவரும்.

    
13. துளக்கமிலரசன் வெற்றிகாட்டும் விளக்குநிலை விளம்பிய
விளக்குநிலைக்குச்
செய்யுள்:-

    
"வளிதுரந்த கண்ணும் வலந்திரியாப் பொங்கி
     யொளிசிறந் தோங்கி வரலா-லளிசிறந்து
     நன்னெறியே காட்டும் நலந்தெரி கோலாற்கு
     வென்னெறியே காட்டும் விளக்கு"
                [பு. வெ. பா. 12]

எனவரும்.

    
14. அடரவிர்பைம்பூண் அரசன்றன்னைச் சுடரொடுபொரூஉம்
அத்துறைப் பகுதிக்குச்
செய்யுள்:-

    
"வெய்யோன் கதிர்விரிய விண்மே லொளியெல்லா
     மையாந் தொடுங்கி மறைந்தாங்கு-வையகத்துக்
     கூத்தவை யேத்துங் கொடித்தேரான் கூடியபின்
     வேத்தவையுண் மையாக்கும் வேந்து"
             [பு. வெ. பா. 13]

எனவரும். மையாத்தல்-புற்கென்றல்.

    
15. உவகையொடுவேந்தன் ஒலி மறையவர்க்குக் கபிலையீந்த
கபிலைநிலைக்குச்
செய்யுள்:-

    
"பருக்காழுஞ் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
     குருக்கட் கபிலை கொடுத்தான்-செருக்கோ