பக்கம் எண் :

76 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     டிடிமுரசத் தானை யிகலிரிய வெங்கோன்
     கடிமுரசங் காலை செய”
                        [பு. வெ. பா. 14]
எனவரும்.

    
16. அந்தமில்புகழான் அமரரவிமுகப்ப வெந்தீவேட்ட வேள்வி
நிலைக்குச்
செய்யுள்:- *

    
“கேள்வி மறையோர் கிளைமகிழ்த லென்வியப்பாம்
     வேள்வி விறல்வேந்தன் றான்வேட்ப-நீள்விசும்பி
     னீர்ந்தா ரிமையோரு மெய்தி யழல்வாயா
     லார்ந்தார் முறையா லவி”
                      [பு. வெ. பா. 15]

எனவரும்.

    
17. மண்மிசைக் கொண்மூ மழைவளந்தருமென விண்மிசைத்
தோற்றிய வெள்ளி நிலைக்குச்
செய்யுள்:-

    
“சூழ்கதிர் வான்விளக்கும் வெள்ளி சுடர்விரியத்
     தாழ்புயல் வெள்ளந் தருமரோ-சூழ்புரவித்
     தேர்விற்றார் தாங்கித் திகழ்ந்திலங்கு வேலோய்நின்
     மார்பிற்றார் கோலி மழை”
                      [பு. வெ. பா. 16]

எனவரும்.

    
18. தாட்டாழ்தடக்கைத் தாமமார்பன் நாட்டுவளனுரைத்த நாடு
வாழ்த்திற்குச்
செய்யுள்:-

    
“எண்ணி னிடரெட்டு மின்றி வயற்செந்நெற்
     கண்ணின் மலரக் கருநீலம்-விண்ணின்
     வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வே
     னகைத்தாரான் றான்விரும்பு நாடு”
               [பு. வெ. பா. 17]

எனவரும்.
இடரெட்டாவன:-
 

[குறள் வெண்பா]
 

     “விட்டில் கிளிநால்வாய் வேற்றரசு தன்னரசு
     நட்டம் பெரும்பெயல்கா லெட்டு”
1

என இவை.


   * புறநா. 372 - மறக்களவேள்வி.
   (பா - ம்). 1 காற்றெட்டு.