|
ராரெயின் மன்னன் மடமக ளம்பணைத்தோட்
கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி” [பு. வெ. பா. 22]
எனவரும்.
24. கதமிக்கெழுபடைக் காவல்வேந்தன் புதல்வற்பயந்த பொலிவு
மங்கலத்திற்குச் செய்யுள்:-
“கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்
பெருங்கட் புதல்வன் பிறப்பப்-பெரும்பெயர்
விண்ணார் மகிழ்ந்தார் வியலிடத்தா ரேத்தினா
ரெண்ணா ரவிந்தா ரிகல்” [பு. வெ. பா. 23]
எனவரும்.
25. வாட்படைத்தானை மன்னவன் பிறந்த நாட்சிறப்புரைத்த நாண்
மங்கலத்திற்குச் செய்யுள்:-
“கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ-சுரும்பிமிர்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதி றாந்திறப்பர் தாள்” [பு. வெ. பா. 24]
எனவரும்.
26. விரைந்து கொடைபெற்றும் விடைபெறாதிரவலன் பரிந்து
கடைக் கூட்டிய பரிசினிலைக்குச்
செய்யுள்:- *
“வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர்
நல்கிய பின்னு நனிநீடப்-பல்போர்
விலங்குங் கடற்றானை வேற்றார் முனைபோற்
கலங்கு மளித்தென் கடும்பு”
[பு. வெ. பா. 25]
எனவரும்.
27. வண்புகழறைந்தோர்க்கு மன்னவனுதவிப் பண்புறவிடுத்த
பரிசில்விடைக்குச் செய்யுள்:-1
“படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரு
நடைநவின்ற பாய்மாவு நல்கிக்-கடையிறந்து
முன்வந்த மன்னர் முடிவணங்குஞ் சேவடியாற்
பின்வந்தான் பேருளி னான்” [பு. வெ. பா. 26]
எனவரும்.
* புறநா. 163.
1 ” 140, 152, 162, 165, 397, 399. |