பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]79


     28. நிறைவினை முற்றிய நீள்கழலோன்மனை அறன்மலியுரைத்த
ஆள்வினைவேள்விக்குச்
செய்யுள்:-

    
"நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகி
     லொன்ற வுயிர்களிப்ப வோம்பலால்-வென்றமருள்
     வாள்வினை நீக்கி வருக விருந்தென்னு
     மாள்வினை வேள்வி யவன்"
                    [பு. வெ. பா. 27]

எனவரும்.

    
29. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக்காட்சி
உறழத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கறிவுறீஇச் சென்றெதிரத்
தெரித்த ஆற்றுப்படையும் என்புழிக் கூத்தராற்றுப்படைக்குச்
செய்யுள்:-

    
"கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார் கூத்தின்
     றலைவ தவிராது சேறி-சிலைகுலாங்
     காரினை வென்ற கவிகையான் கைவளம்
     வாரினை கொண்டு வரற்கு"
                     [பு. வெ. பா. 29]

எனவரும்.

பாணராற்றுப்படைக்குச் செய்யுள்:- *

    
"இன்றொடை நல்லிசையாழ்ப் பாணனீ யெம்மேபோற்
     கன்றுடை வேழத்த கான்கடந்து-சென்றடையிற்
     காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
     தாமரை சென்னி தரும்"
                        [பு. வெ. பா. 28]


எனவரும்.


பொருநராற்றுப் படைக்குச் செய்யுள்:-

    
"தெருவி னலமருந் தெண்கட் டடாரிப்
     பொருவில் பொருநநீ செல்லிற்-செருவி
     லடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயு
     நெடுந்தடக்கை யானை நிரை"                
[பு. வெ. பா. 30]

எனவரும்.

விறலியாற்றுப் படைக்குச் செய்யுள்:- 1

    
"சில்வளைக்கைச் செவ்வாய் விறலி செருப்படையான்
     பல்புகழ் பாடிப் படர்தியே-னல்லவையோ
     ரேத்த விழையணிந் தின்னே வருதியாற்
     பூத்த கொடிபோற் பொலிந்து"
                   [பு. வெ. பா. 31]

எனவரும்.

  
* புறநா. 68-70, 138, 141, 155, 180.
   1 " 64, 103, 105, 133.