னிலந்தரியச் செல்லு நிரைதண்டார்ச் சேரன் வலந்தரிய வேந்திய வாள்" [பு. வெ. பா. 35] எனவரும். 34. எண்ணருஞ்சீர்த்தி இறையோ னெய்தி மண்ணுதல் புரிந்த மண்ணு மங்கலத்திற்குச் செய்யுள்:- "கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாண் மங்கலங் கூற மலிவெய்திக்-கங்கையாள் பூம்புன லாகங் கெழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து" [பு. வெ. பா. 36] எனவரும். 35. அறிவோர் வேந்தனுக்கு ஆய்ந்திவைசெய்கென உறுதிகூறிய ஓம்படைநிலைக்குச் செய்யுள்:- "ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களங்கொண்ட வேல்வேந்தே-சென்றுலா மாழ்கடல்சூழ் வையகத் தைந்துவென் றாறகற்றி யேழ்கடிந் தின்புற் றிரு" [பு. வெ. பா. 37] எனவரும். ஒன்று - மெய்யுணர்தல். இரண்டு - தானும், தலைவனும். மூன்று - காமம், வெகுளி, மயக்கம். நான்கு - ஒழுக்கம், நோன்பு, செறிவு, அறிவு. ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஆறு - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண். ஏழ் - எழுச்சி, பிறப்பு; எழுபிறப்பும் விளைவிக்கும் வித்தாகிய அவா. என்னை? ஆசிரியர் திருவள்ளுவரும், "அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து" - [குறள். 361] என்றாராகலின். ஒன்று - ஞானம்; ஆன்மா என்றுமாம். இரண்டு - காரணகாரியங்கள்; புண்ணியபாவம் என்றுமாம். மூன்று - நட்புப் பகை நொதுமல். உச்சாகசத்தி, பிரபுசத்தி, மந்திரசத்தி என்றுமாம். நான்கு - யானை, தேர், குதிரை, காலாள்; சாம தான பேத தண்டம் என்றுமாம். ஐந்து - செவி, மெய், கண், வாய், மூக்கு எனப் பெயரிய பொறிகள். ஆறும் ஏழும். [நேரிசை வெண்பா] "[நாடிய நட்புப் பகைசெலவு நல்லிருக்கை கூடி னரைப்பிரித்தல் கூட்டலா] - [றீடிலா |