பக்கம் எண் :

82 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     வேட்டங் கடுஞ்சொல் மிகுதண்டஞ் சூதுபொரு
     ளீட்டங்கட் காமமிவை யேழ்]”

என முறையே இவையாம்.

    
36. வழிபடுதெய்வ நிற்புறங்காப்பப் பொலிமினென்னும் புறநிலை
வாழ்த்திற்குச்
செய்யுள்:-

    
“கொடிபடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக்
     கடிபடு கொன்றையான் காப்ப-நெடிதுலகிற்
     பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற
     மாமலைபோன் மன்னுக நீ”                  
[பு. வெ. பா. 38]

எனவரும்.

    
37. மூவர்கொடியுளும் ஒன்றொடு பொரீஇ மேவரவுரைத்த வியன்
கொடிநிலைக்குச்
செய்யுள்:-

    
“பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
     பாம்புண் பறவைக் கொடிபோல-வோங்குக
     பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
     கொல்யானை மன்னன் கொடி”
                  [பு. வெ. பா. 39]

எனவரும்.

    
38. சோவினையழித்த துளவணி மாயோன் மேவருவிறலினை
வியந்த கந்தழிக்குச்
செய்யுள்:-

    
“மாயவன் மாய மதுவான் மணிநிரையு
     ளாயனா வெண்ண லவனருளான்-காயக்
     கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
     சுழலழலுள் வைகின்று சோ”
                    [பு. வெ. பா. 40]

எனவரும்.

    
39. எரிசுடர்வேலவற்கு இளகியவுள்ளத் தரிமலர்க்கண்ணியர்
ஆடிய வள்ளிக்குச்
செய்யுள்:-

    
“வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே
     யீண்டியம் விம்ம வினவளையார்-பூண்டயங்கச்
     சூலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு
     வேலனோ டாடும் வெறி”
                       [பு. வெ. பா. 41]
 

எனவரும்.