பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]83


     40. விரும்பிய தரூஉம் விண்ணவர்தம்முழை அரும்பெறற் புலவரை
ஆற்றுப்படுத்தற்குச்
செய்யுள்:- *

    
“வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லி
     னெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்
     கிருளீயும் ஞாலத் திடரெல்லா நீங்க
     வருளீயு மாழி யவன்”
                          [பு. வெ. பா. 42]

எனவரும்.

    
41. வீற்றதொன்றெய்துகம் வியனிலத்தியாமெனப் போற்றரு
மிறைக்கெதிர் புகழ்ந்தனர் பரவற்குச்
செய்யுள்:-

    
“சூடிய வான்பிறையோய் சூழ்சுடலை நீற்றரங்கத்
     தாடி யசையா வடியிரண்டும்-பாடி 
     யுரவுநீர் ஞாலத் துயப்போக வென்று
     பரவுதும் பல்காற் பணிந்து”
                     [பு. வெ. பா. 43]

எனவரும்.

    
42. விடுசுடரெறிக்கும் மேனிவானவனைப் படுபயன்கருதிப்
பழிச்சினர் பணிதற்குச்
செய்யுள்:- 1

    
“ஆட லமர்ந்தா னடியடைந்தா ரென்பெறா
     ரோடரி யுண்க ணுமையொருபாற்-கூடிய
     சீர்சா லகலத்தைச் செங்க ணழனாகந்
     தாராய்த் தழுவப் பெறும்”
                      [பு. வெ. பா. 44]

எனவரும்.

    
43. மருமலர்க்கோதை மடவரறலைவன் விரிமலர்த்தாமம் விழைந்த
கைக்கிளைக்குச்
செய்யுள்:-

    
“மங்குன் மனங்கவர மான்மாலை நின்றேற்குப்
     பொங்கு மருவிப் புனனாடன்-கங்குல்
     வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித்
     தருவான்கொன் மார்பணிந்த தார்”
              [பு. வெ. பா. 45]

எனவரும்.

    
44. அல்லிடை விரும்பாது அவன் முயக்கமர்ந்து செல்பவன்
செல்வகை தெரிந்தபெருந்திணைக்குச்
செய்யுள்:-

    
“வயங்குளைமான் றென்னன் வரையகலந் தோய
     வியங்கா விருளிடைச் செல்வேன் - மயங்காமை

   * புறநா. 48, 49, 141.
   1 ” 83 - 85.