|
யோடரிக் கண்ணா யுறைகழிவாண் மின்னின்றான்
மாட மறுகின் மழை”
[பு. வெ. பா. 46]
எனவரும்.
45. வில்லேர்நுதலி விறலோன் மார்பம் புல்லேம் யாமெனப்
புலந்த புலவிக்குச்
செய்யுள்:-
“மலைபடு சாந்த மலர்மார்ப யாநின்
பலர்படி செல்வம் படியேம்-புலர்விடியல்
வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
கண்டனங் காண்டற் கினிது”
[பு. வெ. பா. 47]
எனவரும். இம்மூன்றும் பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாகக்
கூறலின் அகமாகாது
புறமாயின.
46. படிமிசையியங்காப் பணிமொழி மகளிர் கடவுளை நயந்த
கடவுட் பக்கத்திற்குச்
செய்யுள்:-
“நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே
லொல்கெனி னுச்சியா ணோமென்னு-மல்கிரு
ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை
யூட லுணர்த்துவதோ ராறு” [பு. வெ. பா. 48]
எனவரும்.
47. பூதலத்தரிவையர் பொருவில் வானவரைக் காதலித்துரைத்த
கடவுட் பக்கத்திற்குச்
செய்யுள்:-
“அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாசம்
புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு
பண்ணலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூரெ
னுண்ணலங் கூட்டுண்டா னூர்” [பு. வெ. பா. 49]
எனவரும்.
இதுவுமது:-
[அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்]
“யான்செய் தவத்தின் பெரும்பயனே
யென்னா ரமுதே யென்றுணையே
வான்செய் யரசே திருவொற்றி
வள்ளால் வந்த தென்னென்றேன்
இ. வி. -26 |