பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]97


     35. ஏராரகட்டூரெய்திய காதலன் வாராமுன்கார்வந்த கார்
முல்லைக்குச்
செய்யுள்:-

    
“புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர்
     துனையுந் துணைபடைத் துன்னார்-முனையு
     ளடன்முகந்த தானை யவர்வாரா முன்னங்
     கடன்முகந்து வந்தன்று கார்”
            [பு. வெ. முல். பொது. 2]

எனவரும்.

    
36. வார்கழற்பகைஞரை வணக்கய மன்னவன் தேர்வரவுரைத்த
தேர்முல்லைக்குச்
செய்யுள்:-

    
“தீர்ந்து வணங்கித் திறையளப்பத் தெம்முனையு
     ளூர்ந்துநங் கேள்வ ருழைவந்தார்-சார்ந்து
     பரிகோட்ட மின்றிப் பதவார்ந் துகளுந்
     திரிகோட்ட மாவிரியத் தேர்”
           [பு. வெ. முல். பொது. 3]

எனவரும். பரி - செலவு.

    
37. ஆண்டகையகல அணங்கழியில்வயின் நாண்டுணை யாவுறூஉம்
நாண்முல்லைக்குச்
செய்யுள்:-

    
“கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின்
     பெய்வளை யாட்குப் பிறிதில்லை-வெய்ய
     வளிமறையு மின்றி வழக்கொழியா வாயி
     னளிமனைக்கு நற்றுணை நாண்”
[பு. வெ. முல். பொது. 4]

எனவரும். வளிமறை - கதவு.

    
38. புல்வளம்பழித்துப் புரவலற் புகழ்ந்துதம் இல்வளமிகுந்த
இல்லாண்முல்லைக்குச்
செய்யுள்:-

    
“கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி
     யொல்லும் வகையால் விருந்தோம்பிச்-செல்லுந்த
     மிற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப்
     புற்செல்வம் பூவா புகழ்”
[பு. வெ. முல். பொது. 5]
 

எனவரும்.

 

     39. வயலுழுபகட்டொடு மணாளனைமனையாள் பயிலுறப்பொரீஇய
பாட்டுமுல்லைக்குச்
செய்யுள்:-

    
“உய்த்தல் பொறுத்த லொழிவின் றொலிவயலு
     ளெய்த்த லறியா திடையின்றி-வைத்த