பக்கம் எண் :

98 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     படுநுகம் பூண்ட பகட்டொடு மானு
     நெடுமொழி யெங்கணவ னேர்”
           [பு. வெ. முல். பொது. 6]

எனவரும்.

    
40. மாலைமார்பன் மடந்தையைப் புணர்ந்த பாலைவாழ்த்திய பான்முல்லைக்குச் செய்யுள்:-

    
“திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்கு பேரொளி
     யங்கண் விசும்பி னகத்துறைக-செங்கட்
     குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப்
     பயில்வளையை நல்கிய பால்”          
[பு. வெ. முல். பொது. 7]

எனவரும்.

    
41. ஆரமுதத்தினும் அன்பனல்கிய காரட கினிதெனுங் கற்பு முல்லைக்குச் செய்யுள்:-

    
“நெய்கொ ணிணந்தூ நிறைய வமைத்திட்ட
     குய்கொ ளடிசில் பிறர்நுகர்க-வைகலு
     மங்குழைக் கீரை யடகு மிசையினு
     மெங்கணவ னல்க லினிது”
               [பு. வெ. முல். பொது. 8]

எனவரும்.

    
42. மேவருகணவன் தணப்பத்தன்னிறைக் காவல்கூறற்குச் செய்யுள்:-

    
“மௌவல் விரியு மணங்கமழ் மான்மாலைத்
     தையன் முதுகுரம்பைத் தான்றமியள்-செவ்வ
     னிறைகாக்கு மிவ்வுலகி னிற்பிறந்த நல்லா
     ணிறைகாப்ப வைகு நிறை”
              [பு. வெ. முல். பொது. 9]

எனவரும்.

    
43. கடிநகரடைந்தவள் அன்னவன் பெருவளனேத்தற்குச் செய்யுள்:-

    
“ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி
     யாழிசூழ் வையத் தகமலிய-வாழி
     கருவரை மார்பினெங் காதல னல்க
     வருவிருந் தோம்பு வளம்”
              [பு. வெ. முல். பொது. 10]

எனவரும்.