|
44. *கொடுப்போரேத்திக் கொடாஅர்ப் பழித்தற்குச் செய்யுள்:-
“சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்துங்
கார்முகி லன்னார் கடைநோக்கிப்-போர்மிகு
மண்கொண்ட வேன்மற மன்னரே யாயினும்
வெண்கொண்ட லன்னாரை விட்டு”
[பு. வெ. ஒழிபு. 1]
எனவரும்.
45. வாணிகன்வென்றிக்குச் செய்யுள்:-
“காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான்
சாடுங் கலனும் பலவியக்கி-நீடும்
பலிசையாற் பண்டம் பகர்வான் பரியான்
கலிகையா னீக்கல் கடன்.”
[பு. வெ. ஒழிபு. 2]
எனவரும்.
46. உழவன்வென்றிக்குச் செய்யுள்:-
“மண்பத னோக்கி மலிவயலும் புன்செய்யுங்
கண்பட வேர்பூட்டிக் காலத்தா-லெண்பதனுந்
தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயர்போல
வித்தித் தருவான் விளைவு”
[பு. வெ. ஒழிபு. 3]
எனவரும். எண்பதம் - நெல் வரகு முதலிய எட்டு உணவு.
47. மல்லவென்றிக்குச் செய்யுள்:-
“கண்டான் மலைந்தான் கதிர்வானங் காட்டியே
கொண்டான் பதாகை மறமல்லன்-வண்டார்க்கு
மாலை துயலு மருவிய 1மாமலையே
போலுந் திரடோள் புடைத்து”
[பு. வெ. ஒழிபு. 4]
எனவரும்.
48. ஏற்றுவென்றிக்குச் செய்யுள்:-
“குடைவரை யேந்தியநங் கோவலனே கொண்டா
னடையவிழ் பூங்கோதை யஞ்சன்-விடையரவ
மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்
தின்று நமர்விட்ட வேறு”
[பு. வெ. ஒழிபு. 5]
எனவரும்.
* இது முதல் வென்றிப்பெருந்திணை யென்பர் பு. வெ. மாலை
ஆசிரியர்.
1 மாமலை. |