சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-35135

விளக்கம்:
 

‘மேல் வேற்றுமைக்கு இடனாய்’ என்றது 176-ஆம் நூற்பாவில் கூறியது.

நிற்கும்இடம்- ஏற்கும் பெயர்க்கு ஈறு.

பொது இலக்கணம்- பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தல்.

இத்துணைய என்பது- விளியை நீக்க ஏழு.

மேலை கூறுதல்-196 ஆம் நூற்பா.

யானைக்கோடு முதல் பொற்றொடி ஈறாகியன அறுவகைத் தொகைக்கும் முறையே
எடுத்துக்காட்டு.

கொல்யானை என்புழி, கொல் என்னும் வினைப்பகுதியைத் தொல்காப்பியனார்
தொழிற்பெயர் என்றே ஆளுதலின் அதுவும் பெயரொடு பெயர் தொக்க தொகையேயாம்.

பெயரொடு பெயர் தொக்கனவும் ஒருசொல் நீர்மையவாய் எழுவாய் வேற்றுமை
முதலிய நிலையை எய்துதல்,
 

  ‘பெயரின் ஆகிய தொகையுமார் உளவே
அவ்வும் உரிய அப்பா லான’
 
தொல்.சொல். 67
    என்ற தொல்காப்பிய நூற்பாவானும் போதரும்.

  காட்டுட்போயினார் கூறை கோட்பட்டார் என்புழித் தேவர்க்குக் கால் நிலம்
தோய்தல் இன்மையின் கூறைகோட்படுதல் அவரளவில் நிகழாதவாறுபோல, வேற்றுமை
ஈறாய் வருதல் எழுவாய் வேற்றுமை அளவில் நிகழாது ஏனை வேற்றுமைகளிலேயே
நிகழும் என்பது. வேற்றுமை இடைச்சொல் அதனை ஏற்கும் பெயர்ச்சொல்லொடு
பிரிக்கப்படும் தொடர்பே உடையது. பெயர்ப்பொருளை வேறுபடுத்தலின் வேற்றுமை
என்ற பெயர் இரண்டாவது முதலிய வேற்றுமை.