ஐந்தாம் எண்ணும் முறைமை- 194 ஆம் நூற்பாவில் கண்டது. காக்கையின் கரிது களம்பழம் என்ற தொடர் காக்கையை விடக் களம்பழம் கரிது என்று பொருள்படுமிடத்து இன் உருபு உறழ் பொருவின்கண் வந்தது எனவும், காக்கையைப்போலக் கரிது களம்பழம் என்று பொருள்படுமிடத்து இன் உருபு உவமப்பொருவாய் வந்தது எனவும் கொள்க. உறழ்தல்- மாறுபடுதல், உவமம்- ஒத்தல். இனி, தொல்காப்பியனார் ஐந்தாம் வேற்றுமைக்குக் கொண்டு முடியும் சொற்களாக, |