சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

530 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

என்ற நூற்பாவானும் அதற்குச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் உரைத்த உரைகளானும் உணரப்படும்.

நீர் பரந்தன- பால் சுரந்தன- என்பன அஃறிணை ஒருமையொடு பன்மை
மயங்கியமைக்கு எடுத்துக்காட்டு.

உண்பன தின்பன பருகுவன நக்குவன என்ற நான்கனையும் சோறு பொதுவாக
உணர்த்தும் பன்மைச் சொல்லாகவும், எய்வன எறிவன வெட்டுவன குத்துவன என்ற
நான்கனையும் படை பொதுவாக உணர்த்தும் பன்மைச் சொல்லாகவும், கண் முலை
என்பன இயற்கைப் பன்மைச் சொற்களாகவும், எல்லாம் என்பது பன்மைச் சொல்லாகவும்,
கொள்ளப்பட்டு ஒருமைவினையோடு முடியுமிடத்து வழு அமைக்கப்பட்டன.
 

  ‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நெறித்தா கும்மே’

தொல்.சொல்.186

என்ற நூற்பாவில் ‘பல்வழி’ என்ற மிகையான் ஒரு பொருளின் பல இடங்களையும்
குறிப்பதற்கும் எல்லாம் என்ற சொல் பயன்படும் என்று குறிப்பிட்ட சேனாவரையருக்கும்
நச்சினார்க்கினியருக்கும் நாடெல்லாம் வாழ்ந்தது என்றாற்போல்வன வழாநிலைகளாம்.
நச்சினார்க்கினியர் இதனை “எல்லாம் என்பது ஒருபொருளின் பலஇடம் குறித்து நிற்றல்
‘பல்வழி நுதலிய’ என்பதனாற் கொள்க” என்று சிந்தாமணி 1539ஆம் பாடல் உரையில்
குறிப்பிட்டுள்ளார். மேனியெல்லாம் பசலை ஆயிற்ற என்புழி, எல்லாம் என்பது எஞ்சாப்
பொருட்டாயதோர் உரிச்சொல் என்பதும் அவர் கூறிய கருத்தேயாம்.