| என இவை முன்னிலைக்கு ஏற்ற மெய் ஊர்ந்து வந்தவாறு கண்டுகொள்க. ஈகாரம் ஒன்றேயாகப் புக்கீ- உண்டீ- உரைத்தீ- சென்றீ- என முன்னிலைவினை ஈற்று வேறுபாட்டிற்கு ஏற்ப மெய் வேறுபட்டு வருதலான் ‘அந்நிலை மரபின் மெய்’ என்றார். ஏகாரம் மகரம் ஊர்ந்து அல்லது வாராது. இவ் வெழுத்துப்பேறு புணர்ச்சி விகாரம் ஆகலின் ஈண்டுக் கூறற்பாற்று அன்று எனின், அற்றன்று; முன்னிலை ஏவல் முன் ஈயும் ஏயம் அச்சொல்லொடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையான், மெய்ப்புணர்ச்சி விகாரம் எனப்படா என்க. ஈ என்பது ஓர் இடைச்சொல் என்பது அறிவித்தற்கு ‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ (359) என்பதனைச் சார ஈண்டுப் போதந்து கூறினார். |