தமிழ்நெறி விளக்கம் 12

     முதலெனப்பட்டது இடமும் காலமும் என்று உணர்வது. கருவெனப்பட்ட
பொருள் 1செய்கை யொழித்துக் கொள்க. அதுவும்  உரியும்  பண்பெனப்படும்;
இந்நான்கின் கூட்டமும் திணையெனப்படுமென்பது.(2)

ஐந்திணையின் இடம்

3.பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம்
பரப்பமை வாரி குறிஞ்சிமுதற் 2பாகே.

     (எ-து.) ஐந்திணைக்கும்  இடமுதல்  ஆமாறு  உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) மலைச்சாரலும்,  வெம்பரலத்தமும்,   சிறுதூறுடைப்   புறவும்.
மலர்கஞலிய பழனஞ்சூழ்ந்த வயலும்,   கடலொடு    கழிசார்ந்த   பெருமண
லெக்கரும்      குறிஞ்சி,    பாலை,    முல்லை,    மருதம்,   நெய்தெலன
ஐம்பெருந்திணையின் நிலமுதலென்றவாறு.(3)

ஐந்திணையின் பெரும்பொழுது

4.கூதிர் வேனில் கொழுங்கா ரொழிபனி
வேனில் முன்பனி மெய்யுயர் பொழுதே.

     (எ-து.) ஐந்திணைக்கும்      காலமுதலுட்   பெரும்பொழுது   ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) ஐப்பசியுங்   கார்த்திகையுமாகிய  கூதிர்க்காலமும்,   ஆனியும்
ஆடியுமாகிய வேனிற்காலமும், ஆவணியும்   புரட்டாசியுமாகிய   கார்காலமும்,
மாசியும் பங்குனியுமாகிய பின்பனிக் காலமும்,  சித்திரையும்   வைகாசியுமாகிய
இளவேனிற்      காலமும்,   மார்கழியும்   தையுமாகிய   முன்பனிக்காலமும்
முறையானே ஐந்திணைக்கும் 3உயர் காலமுதலாம் என்றவாறு.(4)

சிறுபொழுது

5.இருணிலை யுச்சி மாலை வைகறை
பொருணிலை 4யந்தி புணர்க்கும் பொழுதே.

     (எ-து.) சிறு காலமுதல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.


    1. 9-ஆம் சூத்திரத்தைப் பார்க்க.

    2. பாகு - பகுதி; “படுதிரை   வையம்   பாத்திய  பண்பே”  என்றார்.
தொல்காப்பியனாரும்.

    3. உயர்காலம் - பெரும்பொழுது.

    4. “காலை யந்தியும் மாலை  யந்தியும்” (புறநா. 34-8)  என்பவாகலின்
இங்கேநாட்காலையையும் ஏற்பாட்டையும் அந்தியென்றார்.