மணிவிளக்கு மம்மனையும் பிறவு மெல்லாம், பாடி யவைப்பனவும் பந்தாடப் படுவனவும் பனிநீர் முத்தம்” (இறை. 12, மேற்.); “துவைக்குந் துளிமுந்நீர்க் கொற்கை மகளிர், அவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்தம்” (யா. கா. ஒழிபு. மேற்.) அவைக்குநர் மாதோ வலங்குகதிர் முத்தே” (40) என்பது கையுறை யெளிமை கூறியது. 23. | “மாணெழி லண்ணல் வாங்குதும் யாமே சேணுயர் சிலம்பில் யாங்கணும் காணல மன்னோவிக் கமழ்பூந் தழையே” (41)(களவியற்.33, மேற்.) | என்பது கையுறை எமக்குத் தகாதென்றது. | 24. | “மாமலைச் சிலம்ப மயிலேர் சாயற் றேமொழி நிலைமை தெரிந்தபின் பூமென் றண்டழை கொள்குவன் புரிந்தே” (42) (களவியற். 34, மேற்.) | என்பது தலைமகள் நிலைமை யறிந்து கொள்குவனென்றது. | 25. | “மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே”(குறுந். 17.) | என்பது மடலேறுவனென்றது. | 26. | “கொள்ளலி ரம்ம வருளினி ராதலிற் புள்ளின் பெருங்கிளை யலற வள்ளிதின் விரிந்த மாப்பனை மடலே”(43) | என்பது மடலேற்று விலக்கியது. | 27. | “எளிதோ வம்ம வொளியிழை மடந்தை கிளிபுரை கிளவியு நடையும் இளமென் சாயலு மெழுதுமா றுமக்கே.” (44) | இதுவுமது, | 28. | “நன்னுத லாய மெவ்வயி னியலினும் என்வழிப் படர்குவண் மாதோ வின்முனை வாழ்நர் மென்மட மகளே.” (45)
| இதுவுமது, | 29. | “அடுந்திறல் வேழ மகற்றி யெம்வயிற் கடுந்துய ரொழித்தனை யாதலின் மடந்தை கண்ணு மேனியும் புரையும் தண்ணறுங் குவளையொடு தழைதந் தீயே” (46) | என்பது தழையெதிர் கோடல். |
|