37. | “செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”( குறுந். 1) |
என்பது தலைமகளைக் குறிவயின் நிறுத்திப் பெயர்ந்தது. |
38. | “பேதுறல் வாழிநின் காதற் றோழி கைபுனை கோலமென மெய்பெற் றன்றே ஐயம் யாவது மின்றிப் பெய்பூங் கோதை பெருங்கவின் கொளவே” (54)
( களவியற். மேற்.) |
என்பது தான் தோழியிற் புனைந்தமை உணர்த்தியது. |
39 . 5. | “மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி ஞாயி றனையன் யானே யாவதும் வெஞ்சொல் யான்வியந் துரைப்பவும் எஞ்சாக் கவினிவ ணெய்த லானே”
( களவியற். மேற்.) (55)
|
என்பது தலைமகள் நிலைமை கூறியது. |
40. | “நறும்பூங் கண்ணியும் பெருந்தண் கோதையும் நகைவாய்ப் பிணையலு முகைவாய்ச் சூட்டும் புனைந்தனை யருளல் வேண்டும் சினங்கெழு கானவன் செழுமட மகளே” (56)
(நம்பி 149, மேற்; களவியற். மேற்.) |
என்பது கொண்டு நீங்கல். |