நாகந் தொடுத்துழல, வங்கப் புணரி கடைந்தவந் நாள்வந்த வான்மதியே’, (அம்பிகாபதி கோவை. 250) | | இரவே யாயி னல்லை பகலே மெல்லியற் கொடிச்சி நுதலினும் புல்லென் றனையா னோகோ யானே” (60)( களவியற் மேற்.) | இதுவும் அது | 5. | “1அன்னை வாழி நெருநன் மாதர் மென்முலை யரும்பிய வாகமும் என்னும் பன்முறை நோக்கின ளினிதே” (61)
( களவியற்மேற்.) | என்பது குறிப்பினாற் செறிப்பறிவுறுத்தது. | 6. | “பாங்கின ராகித் தீங்குதலைத் தருநரின் ஈங்குப் பிரிவு சூழ்ந்தன் றியாங்கன மொழிகோ வேங்கையது வினையே” (62)
( களவியற் மேற்.) | என்பது சிறைப்புறத்துச் செறிப்பறிவுறுத்தது. | 7. | “உரையா யண்ணல் செய்திற முரிதினின் விரைவாய் வேங்கை விரியக் குரல்சாய்ந் தொழிந்ததெங் கொய்புனத் தினையே”(63) | என்பது வெளிப்படச் செறிப்பறிவுறுத்தது. |
1. “பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென, ஆகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக், கண்ணுருத் தெழுதரு மூலையு நோக்கி, எல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப், பெருந்தோளடைய முயங்கி நீடுநினைந், தருங்கடிப் படுத்தனள்யாயே” (அகநா.150 : 1-6); “அன்னை நெருநலணியிழையாள் கொங்கையையும், என்னையுநோக்கி யிருவரையும்-புன்னை, வளையாடு கானல்வாய் மானனையீ ரின்றி, விளையாடு மென்றாள் விழைந்து” (கிளவித்தெளிவு); “நீர்வண்ணன் வெண்டிரை மேனின்ற வேந்தனெல் வேலியொன்னார், போர்வண்ணம் வாட்டிய பூழியன் பூந்தண் குருந்தொசித்த, கார்வண்ணன் போல்வண்ணன் காவிரி நாடன்ன காரிகையாள், ஏர்வண்ண நோக்கிநின றென்னையு நோக்கின ளெம்மனையே”, “உளமலை யாமைத் திருத்திப் பொருவா னுடன்றெழுந்தார், களமலை யாமைக் கடையல்வென்றான்கடற் றானையன்ன, வளமுலை வான்முறு வற்றைய லாகத்து வந்தரும்பும், இளமுலை நோக்கிநின் றென்னையு நோக்கின ளெம்மனையே’ (பாண்டிக்கோவை);“சிலம்பிற் போகிய செம்முசு வாழை, அலங்க லந்தோ டசைவளி யுறுதொறும், பள்ளி யானைப் பரூஉப்புறந் தைவரும், நல்வரை நாடனொடருவி யாடியும், பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும், நறுவீ வேங்கை யினவண் டார்க்கும், வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும், அரிய போலுங் காதலந் தோழி, இருங்க லடுக்கத் தென்னைய ருழுத, கரும்பெனக் கவி |
|
|