(இ-ள்.) நடுவுபட்ட இருள்யாமமும், கதிர் காயும் உச்சிப் பொழுதும், மாலைப்பொழுதும், புலர்காலையும், அந்தியும், எற்பாடும் முறையானே ஐந்திணைக்கும் சிறுகால முதலாமென்றவாறு. (5) கருப்பொருள் 6. | தெய்வ மானிடஞ் செய்தி யுணவோ டெய்திய விசைவிலங் கினையன பிறவும் பொய்தீர் கருவெனப் புகன்றனர் கொளலே. |
(எ-து.) கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லப்பட்ட முதற்பொருட்குரிய தெய்வமும், அவ்வழிவாழும் மக்களும், அவர்களும் தொழில்களும், 1உண்பார்க்குத் துப்பாகிய உணவும், இசையும், ஆங்கண் வாழும் விலங்குகளும், பிறவும் ஐந்திணைக்குப பெற்ற கருப்பொருளாமென்றவாறு. (6) தெய்வம் 7. | முருகனு 2மிரவியு மாயனும் 3வேந்தனும் வருணனு மாக வகுத்தனர் கொளலே.
|
(எ-து.) சொல்லப்பட்ட கருவினுள் அதிதெய்வம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முருகவேளும்: பகலோனும், மாயனும், இந்திரனும் வருணனும் முறையானே ஐந்திணைக்கும் அதிதெய்வ மென்றவாறு. (7) 1. “துப்பார்க்குத் துப்பாய துப்பு”(குறள்-12.) 2. ‘ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற் றோன்றிய மழையினையும் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறப’ (தொல். அகத் 5. ந.) என்றும், தொல்காப்பியர் பாலைக்கு நிலம்வேண்டிற்றினர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்; பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வ மென்று வேண்டுவர்’ (இறை. 1. உரை) என்றும் எழுதியுள்ளவை இதனை நோக்கிப் போலும். ‘தெய்வம் ஆசிரியர் புலப்பட எடுத்தோதிற்றிலரேனும்.... பருதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியுமெனக் கொள்க’ (சிலப். பதி. அடியார்.); ‘அந்நிலத்துக்குப் பரமேசுவரியைத் தவிர ஆதித்தனும் தெய்வமென்று சொல்லுவர்’ (தக்க. 55 உரை.) 3. வேந்தன் - இந்திரன்; “வேந்தன் மேய தீம்புன லுலகமும்’ (தொல். அகத். 5.) |