தமிழ்நெறி விளக்கம் 24

நல் லாய்கொள்கம் போதுதியேற், றாழிக்  குவளைநின் கண்போல்   விரியுந் தடமலரே”, “விளைக்கின்ற பல்புகழ் வேந்தன்  விசாரிதன்  விண்டெதிர்ந்து திளைக்கின்ற மன்னரைச் சேவூ ரழித்தவன் றீந்தமிழ்போல்  வளைக்கொன்று கைம்மங்கை யாய்சென்று கோடுநின் வாயுள்வந்து, முளைக்கின்ற முள்ளெயிற் றேர்கொண் டரும்பின முல்லைகளே” [பாண்டிக்கோவை]

21. “காவி கண்டனை யாயிற் றூவி
மயிலேர் சாயற் குயிலேர் கிளவி
பெயர்ந்தனை யருளல் வேண்டும்
இங்கிவை காணிய வென்னொடும் புணர்ந்தே”(75)
இதுவுமது.
22.1வணர்சுரி யைம்பால் வாணுத லரிவை
அணைதிற மறியலன் யாவதும்
புணர்துயின் மறந்தன புள்ளினம் பெரிதே” (76)

(களவியற் மேற்.)

என்பது அல்லகுறிப்படுதல் சிறைப்புறமாகச் சொல்லிற்று.
23. 2வரிவளைப் பணைத்தோண் மடந்தை யுள்ளி
அரியது நசைஇய நெஞ்சம்
பெரிது மெவ்வம் பெறற்பா லோயே” (77)

(களவியற் மேற்.)

என்பது தலைமகன் நெஞ்சொடு நொந்தது.(18)
 

1. “அறைவா யதிர்கழல் வேந்திக லாற்றுக்  குடியழித்த, கறைவா யிலங்கிலை வேன்மன்னன் கனனியங்  கானலின்வாய், இறைவா யணிவளை யாயென்னை கொல்லோ விரவினெல்லாம், துறைவா  யிளம்புன்னை மேலன்ன  மொன்றுந் துயன்றிலவே”, “பூநின்ற  வேன்மன்னன்  பூலந்தை  வான்புகப்  பூட்டழித்த, வேனின்ற  வெஞ்சிலை    வேந்தனிரணாந்  தகனறியும்,  பானின்றவின்றமி முன்னநல் லாய்நம்பைங் கானலின்வாய்த்,  தூநின்ற மென்சிறை  யென்னமின் றொன்றுந் துயின்றிலவே” [பாண்டிக்கோவை]

2. “அன்னநடைப்  பேதை யருமை   யறியாதே,    என்னை  வருத்துகின்ற தென்கொலோ -  துன்னி, வஞ்சமே யன்ன மலர்விழியா லீடழியும், நெஞ்சமே கட்டுரையாய்    நீ” [கிளவித்தெளிவு];   “தாவினன்பொன்றைஇய  பாவை, விண்டவழிளவெயிற்    கொண்டுநினறன்ன, மிகுகவி   னெய்திய   தொகுகுர லைம்பாற்,      கிளையரினாணற்     கிழங்குமணற்கீன்ற.   முளையோரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய், நயவன் றைவருஞ் செவ்வுறி நல்யாழ் இசையோர்த் தன்ன வின்றீங் கிளவி, அணங்குசா   லரிவையை   நசைஇப்   பெருங்கனிற், றினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற், பெறலருங் குரையளென்னாய்  வைகலும், இன்னா வருஞ்சுர நீந்தி  நீயே  என்னை யின்னற்  படுத்தனை  மின்னுவசிப், புரவுக்கால் கடுப்ப மறலி மைந்துற்று, விரவு  மொழிக்  கட்டூர்  வேண்டுவழிக் கொளீஇப், படைநிலா வ