டானை, மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்த, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய, நீர்மா ணெஃக நிறத்துச்சென்றழுந்த கூர்மதனழியரோ நெஞ்சே யானா, தெளியளல்லோட் கருதி, விளியா வெவ்வந் தலைத்தந் தோயே’ (அகநா.213); “வடமலை மிசையோன் கண்ணின் முடவன், தென்றிசையெல்லை விண்புகு பொதியிற், சூருடை நெடுஞ்சுனை நீர்வேட்டாங்கு, வருந்தினை வாழியென் னுள்ளஞ் சாரற், பொருது புறங் கண்ட பூநுதலொருத்தல், சிலம்பிழி பொழுதினத்தம் பெயரிய, வல்லிய மடுக்கத் தொடுங்கு நல்வரைக், கல்லக வெற்பன் மடமகள், மெல்லியல் வனமுலைத் துயிலுற்றோயே” (தொல். களவு. 43. ந. மேற்.); “ஒளியார் திருநுதலாளை யெளியளென்றுன்னி வந்து, விளியா வருந்துயர் செய்தமையால்விழி ஞத்துவென்ற களியார் களிற்றுக் கழனெடு மாறன் கடிமுனைமேற், றெளியா வயவரிற்றேய்வாயளியவென் சிந்தனையே”, ‘ஏரார் குழன்மட வாளை யெளியளென் றெண்ணிவந்து தீராவிழு மந்தந் தாய்தென்னன் சேவூர்ச் செருவடர்த்த, காரார் களிற்றுக் கழன்மன்னன் மாறன் கழல்பணிந்து, சேரா வயவரிற்றேய்வா யளியவென் சிந்தனையே” (பாண்டிக்கோவை); “இல்லோ லின்பங்காமுற் றாஅங், கரிது வேட்டனையா னெஞ்சே காதலி, நல்லளாகுத லறிந்தாங் கரிய ளாகுத லறியா தோயா”, “குணகடற் றிரையது பறைதபு நாரை, திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை, அயிரை யாரிரைக் கணவந் தாங்குச், சேய ளரியோட் படர்தி, நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே” (குறுந். 120, 128.) |