தமிழ்நெறி விளக்கம் 27

 1. 1ஆறே யரிய வென்னா யாறே
மல்குபுனல் பரந்து கல்லுயர்ந் தனவே
இரவின் வருவர்நங் காதலர்
உரவேன் றோழியா னுயிர் வாழ் வேனே”(78)
 
என்பது ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி.
 2. “வாரா தீமோ சார னாட
2உறுபுலி கொன்ற சிறுகண் யானை
ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம்
ஊறுபெரி துடைய தமியை நீயே”

(சிற்றட்டகம் களவியற், மேற்.)

என்பது வரவு விலகிற்று.
 3.



 
5.
3யாயே துயின்மறந் தனளே யாயினும்
நாயு மூரு நனிதுஞ் சலவே
காவ லாள ரதனினுந் துயிலார்
ஆய்கதிர் மதியநின் றலரும்
 யாவ தாங்கொ லேந்திழை நிலையே”(79)

(களவியற் மேற்.)

என்பது காப்பின் இரங்கிக் கையாறுகிளவி.
 4
 
“பகலே வரினு மாற்றாள் பகலின்
றிரவின் வரினு மந்நிலை யினளே
விரைசேர் மார்ப செய்திறம் விளம்பே”(80)
என்பது இரவினும் பகிலினும் நீவாவென்றது.
 5.



 
4முருகற் செவ்வியொடு பகல்வரி னிவ்வழி
விரவியற் கவ்வை யஞ்சுதும்
இரவரி னதனினும் பெரிதஞ் சுதுமே” (81)

(களவியற் மேற்.)

என்பது இரவினும் பகலினும் வாரலென்றது.


1. “ஆறே  யருமர  பினவே   யாறே, சுட்டுநர்ப்  பனிக்குஞ்  சூருடை
முதலைய,  கழைமாய்   நீத்தங்  கல்பொரு  திரங்க,  அஞ்சுவந் தமிய
மென்னாது .................. ... வாணடந் தன்ன வழக்கருங்  கவலை, உள்ளுந
ருட்குங் கல்லடர்ச் சிறுநெறி, அருள்புரி நெஞ்சமொ டெஃகுதுணை யாக,
வந்தோன் கொடியனுமல்லன்” (
அகநா. 72. 7-19.)

2.“காடுமீக் கூறுங்  கோடேந்   தொருத்தல்,    ஆறுகடி   கொள்ளு
மருஞ்சுரம்” (
அகநா. 65: 16-7.)

3.“இரும்பிழி மகாஅரிவ்  வழுங்கன்  மூதூர்”  (அகநா. 122) என்னும்
செய்யுளைப் பார்க்க.

4.“கந்த னெனநீ கதிர்வேல்  வலனேந்திச்    செந்தினைசூழ்  குன்றச்
சிறுகுடிவாய் - வந்தருளி, நின்றா    லிளவுளர்கண்       மெய்யுணரி
னேரிழைக்கு,     நன்றாத   லுண்டோ      நவில்”   (
பழம்பாட்டு);
“துறுக ணண்ணிய கறியிவர்