தமிழ்நெறி விளக்கம் 30
பாடுந்தண்   டாரண்ணல்   வந்துசெய்த,   அருடா   னலராய் விளைகின்ற
தானமற்றிவ்   வாயிழைக்கே”  (பாண்டிக்கோவை); “அலராய்   விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே” (திருச்சிற். 180.)
 
2.

“அணிகொணர்ந் தனரே யயலோ ரண்ணல்
துணிவுறு செய்கி யாதுகொல்
மணிபுரை கூந்தன் மடந்தைதன் வயினே” (87)

(களவியற்  மேற்.)

என்பது அயல்வரைவுரைத்தது
 3.“பணிநாட் டாமரை போலப் பையத்
துனியா கின்றா னெஞ்ச மெல்லியல்
மின்சேர் நுண்ணிடை திறத்தினி
என்செயற் பால விலங்கிழை தாமே” (88)

(சிற்றட்டகம் களவியற்,  மேற்.)

என்பது தோழியைத் தலைமகன் வினாயது.
 4.



 
“யானெவ னறிகோ வண்ணல் வானொடு
நானில முழுதும் பெறினும்
பேணா ரம்ம விவள்பூண் முலைக்கே” (89)

(களவியற் மேற்.)

என்பது யான் அறியேன், நீயுரை என்றது.
 5. .

 
“தீயினும் வெய்ய வென்குவை யாயின்
யாவது மினிய கானம்
சேயுயர் சிலம்பு நின்னொடு செலினே” (90)

(களவியற்  மேற்.)

என்பது சுரஞ்செல வாற்றும் நின்னோடு என்றது.
 6. “தேரும் பிறவும் நீக்கி யில்லயல்
யாவரும் பயிலா வொருசிறை
வார்பூஞ் சிலம்ப வருதனின் கடனே” (91)

(களவியற் மேற்.)

என்பது வருந்திறம் மொழிந்தது.
 7..



 
“ஊருஞ் சேரியு மலரெழ யாயும்
தானே யிருக்க தன்மனை யானே
திருந்துவேல் விடலையொடு கெழீஇ
அருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே” (92)

(களவியற்  மேற்.)

 என்பது உடன்போக்கு நயப்பித்தது.
.8.

 

 5.

“கானங் கார்பெயத் தண்ணென் நன்றே
வாள மதியு நாணிலா வுதவும்
அன்னை துயரமு நின்னையர் வெகுளியும்
தணிக்குவன் மன்னோ யானே
மணிக்குழன் மாதரைக் காணயான் மறுத்தே”(93)

(களவியற்  மேற்.)

 இதுவும் அது.