என்பது 1செவிலி தலைமகளைப் புனைந்து ‘யாரோ இவளை எய்துதற்குரிய பெருந்தகை’ எனத் தோழி அறத்தொடு நின்றது. 4. | 2எய்யா வுள்ளமோ டினையல் வாழியெம் மைதபு கழங்கிற் பட்டது முளதே, யதுதான் மையில் காட்சியின் வயங்குயிர் மயங்கிய தெய்வ வாணுரு வாகுத றெளிவே” (97)
( களவியற். மேற்) | என்பது தலைமகள் வேறுபாடு கண்டு செவிலி வினவக் கட்டுவிச்சி சொல்லியது. | 5. | “3அறியா ளன்னை வெறிமுறை தொடங்கும் எவனா கியரோ நெஞ்சே பிழையாக் குலஞ்சா லொழுக்கமு நாணும் நலஞ்சால் கற்பு மில்லுழி யெமக்கே” (98) | என்பது செவிலி வெறி கால்கொள்ளத் தலைமகள் இரங்கியது. | 6. | “வீயா மரபி னொருதிற னாடி ஆவயி னுரைப்பி னெவனோ தோழி ‘நாமு முந்நீர் போலக் காம வெந்நோய் கையிகந் தன்றே” (99) என்பது தலைமகன் ஆற்றாமை யுணர்ந்த தோழி அறத்தொடு நிற்றல் தக்கதென்றது. | 7. | “அதுவு மாகுவ துண்டோ கதுமென வஞ்சி நுண்ணிடை மடந்தைநின் நெஞ்சங் காணிய பொய்ம்மொழிந் தனனே” (100) | என்பது ஆற்றாளாய் நின்ற தலைமகளைத் தோழி பொய்ம்மொழிந்தனனென ஆற்றுவித்தது. | |
1.“தலைமகளை ஒருநாட் கோலஞ்செய்து அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, ‘இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ’ என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது” (திணைமாலை நூற்றைம்பது. 62, கருத்து); குறுந் 379. 2.ஐங்குறு, 245, 247, 248, 249, 250 3.‘அறியா மையின் வெறியென மயங்கி, அன்னையு மருந்துய ருழந்தன ளதனால், எய்யாது விடுதலோ கொடிதே’ (ஐங்குறு. 242.)
4.குறள், 1137. |
|
|