தமிழ்நெறி விளக்கம் 35
என்பது தலைமகள் அறத்தொடுநிலை மறுத்தது.
 9. 2அன்பு மன்றே கற்பு மன்றே
நன்றொடு வந்த வொழுக்கமு மன்றே
ஆற்றுதல் புரியி னல்லது
கோற்றொடி மாதர் கூறிய திறமே”(102)
என்பது தோழி அறத்தொடுநிலை நயப்பிக்கக் கூறியது.
 10.3ஆற்றேன் றோழி யானே யவர்மலைப்
பூத்தாழ் பொழிலகந் துழைஇய
காற்றே யானுந் தீண்டலங் கடையே” (103)
என்பது தலைமகள் அறத்தொடுநிலை நயந்தது.
 11. “தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய
எண்ணினை கொடுத்தி யாயின்
அண்ண லாகமு முண்ணுமோ பலியே”(104)

(களவியற் மேற்.)

என்பது வெறியாட்டின்கண் வேலன்மேல் வைத்துத் தோழி அறத்தொடு நின்றது.
    

      1.(அகநா.    52:  12-5),   “பூணொன்று       மென்முலைப்
பொற்றொடியாய்நிறம்   போர்த்தபைம்பொன்,  காணுந்    தொறுங்கலு
ழன்னைக்கு   நின்னருங்கற்புடனே,   சேணின் றுயர்ந்த   மரபுக்கடாத
செயலையின்று, நாணின்றி நின்று மொழிவதின் மாய்கவென் னல்லுயிரே”
(
அம்பிகாபதி கோவை, 350).

      2.வில்லார் நுதலும் விழியும் பசப்பும் வெறிக்குமுன்னே, சொல்லா
தொழியினின்  றன்னையு   நாடுந்   துடிமருங்குல்,   நல்லாய்   குலனு
நலனுமெய்ந் நாணு நயந்தகற்பும், எல்லா மழியுமென்  றேயினி  மேலிதற்
கென்செய்வதே” (
அம்பிகாபதி கோவை, 351.)

      3. நற். 236.

      4.(குறுந். 362);  “கோல  மறியின்  குருதியாற்  கொய்ம்மலரால்,
வேல னயரும் வெறியாட்குச்-சால, மடவார்   மயின்    முருகனன்றியே
யண்ணல்,     தடமார்பு    முண்ணுமோ  தான்”
   (கிளவித்தெளிவு);
“வண்டாரிரும் பொழில் வல்லத்துத் தென்னற்கு   மாறெதிர்ந்த, விண்டா
ருடலின்   மறியறுத்தூட்டி  வெறியயர்ந்து,  தண்டார்  முருகற் றருகின்ற
வேலதண்